|
தன்னடு விருந்த தொத்தும் தாரகை நடுவட் சோம
னென்னவு மிருந்த கோமான் றன்னிடங் குறுகி னாரே.
(இ-ள்.)
பன்னிருகணமும் - இப்போது
சொல்லப்பட்ட
த்வாதசகணங்களும், சூழ - சொன்ன முறையே
பிரதக்ஷணமாக
வரிசையிற் சேர்ந்து தன்னைச்
சூழ்ந்திருக்க, பருதியின்
-
பரிவேஷ்டத்தினுடைய, நடுவண் - மத்தியில்,
உச்சி - உச்சியை,
(அதாவது : உயரத்திலே), மன்னிய
- சேர்ந்திராநின்ற,
அருக்கனொத்தும் - சூரியனுக்குச் சமானமாகியும்,
மந்தரம் -
மஹம்மேருபர்வதமானது, உலக மூன்றின் - மூன்று லோகத்தினுடைய,
தன்னடுவிருந்த தொத்தும் - நடுவிலேயிருந்ததற்
கொப்பாகவும்,
தாரகை நடுவண் - தாராகணங்களினது மத்தியில்,
சோமனென்னவும்
- சந்திரனைப் போலவும், இருந்த - (ஸமவஸரணத்தில்
லக்ஷ்மீவர
மண்டபத்தில் த்ரிதீய பீடத்தின் மேலுள்ள
கந்தகுடி மாளிகையின்
நடுவிலுள்ள சிம்ம பீடத்தின் மேல்) இராநின்ற, கோமான் தன்னிடம் -
ஜினேந்திரனுடைய ஸ்ரீ நிலயமெனும் உள்ளிடத்தை,
குறுகினார் -
(மேரு மந்தரரென்னும் இருவர்களும்) அடைந்தார்கள், எ-று. (139)
1187.மேருவைச் சூழவோடும் விரிகதி ரிரண்டுபோல
வூர்கொண்மண்டலத்தையொக்கும் வலங்கொண்மண்டலத்தி னுள்ளான்
மாரிபோன் மலர்சொ ரிந்து வலங்கொண்டு பணிந்து புக்கார்
தோரணங் கடந்த போழ்திற் றுறவினுக் கிறைவன் றோன்ற.
(இ-ள்.) (அவ்வாறடைந்தவர்கள்),
மேருவை - மஹம்மேரு
பர்வதத்தை, சூழ - சூழ்ந்து, ஓடும் - செல்லுகின்ற, விரி -
விசாலித்த
கிரணங்களையுடைய, கதிரிரண்டுபோல
- இரண்டு
சூர்யர்களைப்போல, ஊர்கொள்
மண்டலத்தை யொக்கும் -
பரிவேஷ்டத்திற்குச் சமானமாகிய, வலங்கொள்
- பிரதக்ஷணமாக
வரும்படியான, மண்டலத்தின் -
ஸமவஸரண பூமிகளில்,
வலங்கொண்டு - பிரதக்ஷணஞ் செய்துகொண்டு,
மாரிபோல் மலர்
சொரிந்து - மழையைப்போல் மலர்களைச்
சொரிந்து, பணிந்து -
வணங்கி, உள்ளால் - ஸ்ரீநிலயத்தின் உள்ளாக,
புக்கார் -
அடைந்தார்கள், தோரணம் - அந்த ஸ்ரீநிலயத்தில்
வீதியில் உள்ள
ஒன்பது ஸ்தூபைகளையும் பத்துத் தோரணங்களையும்
தாண்டியுள்ள
பலிபீடத்தையும், கடந்தபோழ்தில் - கடந்து போனபோது,
துறவினுக்கு
- தபங்களுக்கெல்லாம், இறைவன் - நாயகனாகிய
ஜினேந்திரன்,
தோன்ற - (இவர்கட்குத்) தெரிய, எ-று. 1188. கரங்கள்முன் குவிந்த வுள்ளக்
கமலங்கள் விரிந்து கண்ணீர்
சொரிந்தன பரந்த ரோமம் புளகங்க டுடித்த வாய்ச்சொல்
லரிந்தன சுரந்த காத லடிமுறை யிடுத
லோய்ந்த விரிந்தன
வினைக ளெல்லா மிரவிமுன் னிருளை யொத்தே.
|