(இ-ள்.) (அவ்வாறு
வாழ்த்தத் தொடங்கியவர்கள்), காமாதி -
ராகத்வேஷமோஹங்களை, கடந்ததுவும்
- ஜெயித்ததும்,
கைவலப் பெண்ணடைந்தவுதும்
- கேவலஞ்ஞானமென்னும்
மோட்சலட்சுமியினை யடைந்ததும், பூமாரி
- புஷ்பவருஷங்களை,
பொழிய - தேவர்கள் சொரிய, கமலப்போதில்
- செந்தாமரை
புஷ்பத்தின் மேலே, எழுந்தருளியதும் - ஸ்ரீ விஹாரம் செய்வதும்,
பொன்னெயில் - பொன்னாலாகிய மதில்கள்
சூழ்ந்த, மண்டலத்து -
ஸமவஸரண மண்டலத்திலே, அசோகம் - அசோக விருட்சமானது,
தேம் - வாசனை பொருந்திய, மலர்மாரி
- புஷ்பவருஷங்களை,
பொழிய - சொரிய, சீயவணை
- ஸிம்மாஸனத்தின் மேலே,
அமர்ந்ததுவும் பொருந்தியிருந்ததும்,
தேவர் கோமான் -
தேவேந்திரன், தாமாதியணிந்து - மாலை முதலானவைகளை
யணிந்து
கொண்டு, பணிந்தெழுந்ததுவும் - வணங்கி யெழுந்ததும், தத்துவம் -
இந்த ஸ்வரூபம், என்தகவோ - இஃது என்ன குணமோ?,
என்ன -
என்றும், எ-று. (143)
1191. ஒருமொழியே பதினெட்டா யுலகறிய
விளம்பியது
மொளிகொண் மூன்றிற்
றிருமறுவாய்த் திகழ்கின்ற திருமூர்த்தி
யதனழகுந் தேவ நின்பான்
மருவினர்க்கு மல்லவர்க்கு மொத்திருந்தும்
அடைந்தவர்க்கு வார்த்தை நல்கும்
பெருமயமோ வதிசயமோ பிரானீயே
மூவுலகோர் பிரான கின்றாய்.
(இ-ள்.)
ஒரு மொழியே -
திவ்யத்துவனி யொன்றே,
பதினெட்டாய் - பதினெட்டு விதமான
பாஷைகளாக, உலகறிய -
லோகத்துள்ள பவ்விய ஜீவன்கள் அறியும்படி,
இயம்பியதும் -
சொல்லியதும், ஒளிகொள் மூன்றில் -
மனோஜோதி வாக்ஜோதி
காயஜோதி என்கிற மூன்றிற் பொருந்தி, திருமறுவாய்த் திகழ்கின்ற -
ஸ்ரீதேவியாதி ஸ்ரீலக்ஷணங்கள் ஆயிரத்தெட்டுடன்
பிரகாசியாநின்ற,
திருமூர்த்தி யதனழகும் - பரமௌதாரிக
திவ்ய தேகத்தினழகும்,
தேவ - ஸ்வாமியே!, நின்பால் - உம்மிடத்தில்,
மருவினர்க்கும் -
அடைந்தவர்கட்கும், அல்லவர்க்கும் - சேராதவர்கட்கும்,
ஒத்திருந்து
- நீ ராக த்வேஷமில்லாமல் சமத்துவமாயிருந்து, அடைந்தவர்க்கு -
சேர்ந்தவர்கட்கு, வார்த்தை -
தர்மோபதேசத்தை, நல்கும் -
அளிக்கின்ற, பெருமயமோ - பெரிதாகிய
ஸ்வபாவகுணமோ?,
அதிசயமோ - கர்ம க்ஷயத்தினாலான மிக்க அதிசயமேயாகும், பிரான்
- எப்பொருட்கும் இறைவன், நீயே - நீயேயாகின்றாய், மூவுலகோர் -
இந்த மூன்று லோகத்திலுமுள்ள
பவ்விய ஜீவன்களுக்கு,
பிரானாகின்றாய் - கடவுளாகின்றாய், எ-று. (144)
|