560மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

  1192. விலங்கரசன் வலிவிலக்கி வேர்ப்பொழிந்து
             விமலமாய் வெளிதா யுன்மே
        லிலங்குபொறி யாயிரத்தெட் டிருந்தழகார்ந்
             திளநாற்ற மியல்பா யின்சொற்
        புலந்தனக்கின் னமுதாகி வச்சிரப்பூண்
             செறிந்தாணி யறைந்த யாப்பா
        யிலங்குவடி வுடையதிரு மூர்த்தியியல்
             பதிசயனெம் மிறைவ நீயே.

   (இ-ள்.)   விலங்கரசன் வலி  விலக்கி - மிருகராஜன் வலி நீக்கி
(அதாவது :  அளவில்லாத  மஹா  பலம்பெற்று), வேர்ப்பொழிந்து -
சுவேதா பாவமுற்று, விமலமாய் - ரஜோ மலா பாவமாய், வெளிதாய்-
க்ஷீரஸமான  ரஸ  விசேஷமாய், உன்  மேல்  -  உனது  தேகத்தில்,
இலங்கு - விளங்குகின்ற, பொறியாயிரத்தெட்டு - ஆயிரத்தெட்டாகிய
திருமறுவுகள்,  இருந்து  -  தங்கி (அதாவது :  ஸ்ரீ  தேவியாதி  ஸ்ரீ
லட்சணம்  அமைந்து),   அழகார்ந்து   -  உபமாதீத  ஸௌந்தரியம்
பொருந்தி,  இளநாற்றமியல்பாய்  -    பரமமான   பரிமள   கந்தம்
இயற்கையாய்,     இன்  சொல்     -   ஸ்ரீவணப்      பிரியமான
வசனப்பிரவர்த்தியும்,   புலந்தனக்கின்னமுதாய்  -     கட்புலனுக்கு
அமுதான, ஸமசதூ   ஸ்ரீ  ஸம்ஸ்தானமாய்,  வச்சிரப் பூண்  செறிந்து
ஆணியறைந்தயாப்பாய் - வஜ்ரவ்ரஷபநாராச ஸம்ஹனனமாய், இலங்கு
வடிவுடைய - விளங்குகின்ற  இந்த  ஸ்வரூபங்களை முதலாகவுடைய,
திருமூர்த்தி - பரமௌதாரிக திவ்யதேகத்தையுடையவனும்,  இயல்பின்
அதிசயன்    -  ஸ்வபாவாதிசய   சம்பத்தையுடையவனும்,  (ஆகிய),
எம்மிறைவன்    -     எங்கட்கு     ஸ்வாமியாகியவன்,   நீயே -
நீயேயாகின்றாய். எ-று. (145)

1193. சாயைபசி யிமைப்பொழிந்து சதுமுகமாய்
          மயிருகிர்தம் மளவிற் கேற்றுக்
     காயமிசை யுலவிநல கலைக்கெல்லா
          மிறைவனுமாய்க் கருமக் கேட்டி
     னோசனைநா னூறகத்தி னுயிர்க்கழிவு
          பசிகளுப சருக்க நீங்கத்
     தேசினொடு திளைத்திருந்த திருமூர்த்தி
          யதிசயனெஞ் செல்வ னீயே.

    (இ-ள்.)   சாயை  பசியிமைப்பொழிந்து  -   அச்சாயத்துவமும்
நிர்புக்தித்துவமும்  நிர்னிமேஷத்துவமும்  பெற்று,  சது  முகமாய் -
சதுரானனத்துவம் அமைந்து,  மயிருகிர்தம்மளவிற்  கேற்று - ஸமான
நககேசத்துவமும் பெற்று,