காயமிசை யுலவி -
வ்யோமகமனத்துவம் அடைந்து, நலகலைக்
கெல்லா மிறைவனுமாய் - ஸர்வவித்தியேசுவரத்துவமும்
பெற்று,
ஓசனை நானூறகத்தின் - சுற்றுக்கு நானூறு
யோஜனை பரியந்தம்,
உயிர்க்கழிவு பசிகள் உபசருக்கம் நீங்க
- நிர்ஜ்ஜந்துகவதையும்
துர்ப்பிக்ஷ விரஹமும் நிருப ஸர்க்கமும்
ஆகி, கருமக்கேட்டின் -
கர்ம க்ஷயத்தினாலாகிய, தேசினொடு - ஜோதியோடு,
திளைத்திருந்த
- சேர்ந்திரா நின்ற, திருமூர்த்தி
- பரமௌதாரிக திவ்விய
தேகத்தையுடைய, அதிசயன் - இந்த
கர்மக்ஷயாதிசயசம்பத்தை
யுடையவனாகிய, எஞ்செல்வன் - எமது பக்திக்கு
கந்த ஸம்பத்தை
யுடையவன், நீயே - நீயேயாகின்றாய், எ-று. (146)
1194. திருமொழியின் வியத்தகவு மனைத்துயிரின்
மைத்திரியுந் திக்கா காய
நிருமலமாய் விளங்குதலெவ் விருதுவும்வந்
துடனிகழ்த னிலத்துப் பைங்கூழ்ப்
பெருமையொடு மங்கலங்க ளறவாழி
பூமாரி நறுங்காற் றம்பொன்
மரைமலரி னிரைமுதல்வா னவரின்வரு
மதிசயனெம் மன்ன னீயே.
(இ-ள்.)
திருமொழியின் வியத்தகவும்
- ஸகல
பாஷாஸமன்விதவாக் பிரவர்த்தியும், அனைத்துயிரின்மைத்திரியும் -
ஸர்வஜீவ மித்ரபாவமும், திக்காகாயம் நிருமலமாய்
விளங்குதல் -
ஆகாசதிசா வைமல்லியமும், எவ்விருதுவும்
வந்துடனிகழ்தல் -
ஷட்ருது ஸம்பூர்ண ஸஹப்பிரவர்த்தித் துவமும்,
நிலத்துப் பைங்கூழ்
பெருமை யொடும் - பூதல ஸர்வஸஸ்யாதி ஸம்ருத்தியும்,
மங்கலங்கள்
- அஷ்டமங்கல ஸமூஹங்களும், அறவாழி - தர்ம சக்ரமும், பூமாரி -
புஷ்ப வருஷமும், நறுங்காற்று - மந்த மாருத சலனமும்,
அம்பொன்
மரைமலரின் நிறை - அழகிய பொன்போன்ற அரவிந்தபேஸ்ரீணியும்,
முதல் - முதலாக, வானவரின் வரும் அதிசயன் - தேவர்களாலாகிய
தெய்வீகாதிசய முடையவனாகிய,
எம்மன்னன் - எமக்கு
நாயகனாகியவன், நீயே - நீயேயாகும், எ-று. (147)
1195. அழுந்துவினைப் பகைப்புறங்கண்
டனைத்துலகு
மலோகமுந்தன் னகத்தி னுங்க
வெழுந்தறிவின் முகத்தாலெப் பொருளுமுன
தகத்தடக்கி
யிருந்தோய் வந்து
செழுங்குவடு செறிந்திருந்து முழங்குமெழின்
முகில்போல விராக மின்றி
யெழுந்தருளி வந்திருந்தெப் பொருளுமரு
ளியவெங்க ளிறைவ னீயே.
|