சமவசரணச்சருக்கம்563


Meru Mandirapuranam
 

வர்கள்பேரில்   கோபமும்,    அகன்று  -   நீங்கி,   இருந்தனை -
அவரவர்களின்   தன்மையென்று     ஸமத்துவீபாவமாக    வீதராக
சுத்தோபயோகமாய்   இராநின்றாய், (ஆகையால்), எம்மிறைவனீயே -
எங்களுக்கிறைவன் நீயேயாகும், எ-று. (149)

 1197. பொதுவகையாற் பொருளெல்லா மொன்றேயென்
            றருள்செய்தப் பொதுவ லாத
     விதிவகையாற் பொருளெல்லாம் வேறேயென்
            றவ்விரண்டு மொன்றே யென்றும்
     பொதுவிரிவு பொருணிகழ்வால் வெவ்வேறா
            யொன்றுமா மென்றா லுன்சொன்
     மதிபெரிது மிலாதார்க்கு மாறாகித்
            தோன்றாதோ வானோர் கோவே.

     (இ-ள்.)    வானோர்கோவே    -     தேவர்களுக்கெல்லாம்
முதல்வனாகிய   ஸ்வாமியே!,  (நீ)   பொருளெல்லாம்   -   ஜீவாதி
திரவியங்கள், பொதுவகையால் - தத்தம் ஸாமான்னிய  குணத்தினால்,
ஒன்றேயென்று -  ஒன்றாகுமென்றும்,  அருள்  செய்து  -  அருளிச்
செய்து,   அப்பொதுவலாத  -   அந்த   ஸாமான்ய   குணமல்லாத,
விதிவகையால் - விசேஷ குணத்தினால்,  பொருளெல்லாம் - ஜீவாதி
பொருள்களெல்லாம்,  வேறேயென்று  -   வேறு      வேறென்றும்,
அவ்விரண்டும் - அப்படி  ஸாமான்ய  விசேஷ குணங்களினாலாகிய
ஒன்றும் பலவும் என்னும் தன்மைகள்,  ஒன்றேயென்றும்  -  தத்தம்
ஸாமான்ய விசேஷாஸ்தித்துவத்தினால்  ஒன்றேயென்றும், பொருள் -
ஜீவாதி பொருள்கள்,   பொது -   ஸாமான்யத்தினாலும்,   விரிவு -
விசேஷத்தினாலும்,   நிகழ்வால்  -    அஸ்தித்துவமாகி  நிகழ்கின்ற
விதத்தால்,  வெவ்வேறாய் -  விசேஷ  குண  பரியாயத்தால்  வேறு
வேறாகி,   ஒன்றுமாம்  -  ஸாமான்ய  குண  பரியாயத்தால் ஒன்றும்
ஆகும், என்றால் - என்று அருளிச்  செய்தால், உன் சொல் - உனது
வசனமானது,    மதி      பெரிது   மிலாதார்க்கு     -     அற்ப
புத்தியையுடையவர்களுக்கு, மாறாகி - விரோதமாகி, தோன்றாதோ - 
தோற்றாதோ, எ-று. (150)

 1198. ஆதியா யாதியிலா யந்தமா
            யந்தமிலா யடையா தெய்தும்
     போதியாய் போதியிலாய் புறத்தாயெப்
            பொருளினுக்கு மகத்தாய் மூன்று
     சோதியாய் சோதியிலாய் சுருங்காதாய்
            பெருகாதாய் தோன்றா மாயா
     நீதியாய் நீதியிலாய் நினைப்பரியாய்
            வினைப்பகையெம் மிறைவ னீயே.