564மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  ஆதியாய் - ஜீவஸ்வபாவ  குணமுற்ற    முதல்வனே!,
ஆதியிலாய் -    திரவியார்த்திக   தன்மையினால்   முதலில்லாமல்
அனாதியானவனே!,   அந்தமாய்   -     ஸம்ஸாரத்தை      நீக்கி
மோட்சமென்னும் முடிவாய்,  அந்தமிலாய்  - இனி அத்தத்துவத்தின்
முடிவு ஒருபோது மில்லாதவனே!,  அடையாது -  இந்திரியங்களுக்கு
விஷயமாகி     அடையாமல்,     எய்தும்     -      ஆத்மகுண
ஸ்வபாவத்தாலடைகின்ற,     போதியாய்       -       அதீந்திரிய
ஞானத்தையுடையவனே!,  போதியிலாய்  -  இந்திரிய   விஷயமாகிய
மதிசுருத   அவதி   முதலாகிய   கிரமகரண   ஞான       பரிண
மனமில்லாதவனே!, புறத்தாய் -  ஸகல  பதார்த்தத்திற்கும் நீங்கலான
ஸ்வத்திரவிய குண ஸ்வயம்புவானவனே, எப்பொருளினுக்கும் - ஸகல
பதார்த்தத்திற்கும்,  அகத்தாய் -  உனது  குணத்தினால்   ஞானாந்த
ஸ்தித யுக்தனே, மூன்று சோதியாய் - ஆத்ம  குணமான சுத்த ஞான
தர்சன   சாரித்திர   ஜோதி   யுக்தனே!,   சோதியிலாய்   -  இதர
ஜோதிகளில்லாதவனே,  சுருங்காதாய்  பெருகாதாய்  -   சுருக்கமும்
பெருக்கமும்  இல்லாத  தன்மையனே!,   தோன்றாமாயா  நீதியாய் -
திரவியார்த்திக  நயத்தினால்  ஜனனமரண  ஸ்வரூபமாகிய   தன்மை
இல்லாத  த்ரௌவ்ய  யுக்த  நிச்சய  நீதிஸ்வரூபனே!,  நீதியிலாய் -
பரியாயார்த்திக  நயவ்யவஹார  ஸ்வரூப  வ்யதிரிக்த நீதி ரஹிதனே!,
நினைப்பரியாய் - அசிந்திய  ஸ்வரூபனே!,  வினை - கருமங்களுக்கு,
பகை  -  சத்துருவாகி  ஜயித்தவனே!,  எம்  இறைவன்  -  எங்கள்
நாயகன், நீயே - நீயேயாகின்றாய், எ-று. (151)

 1199. காமருதுந் துபிகறங்கக் கடிமலர்மா
          மழைபொழியக் கவரி பொங்கத்
     தேமருபூம் பிண்டியின்கீழ் மண்டலபோய்த்
          திசைகுலவத் திங்கள் வட்டந்
     தாமொருமூன் றனையமணி முக்குடைக்கீழ்
          மிக்கவினை யுடையச் செல்லுஞ்
     சேமமுடை நெறியருளிச் சீயவணை
          யமர்ந்தனையெஞ் செல்வ னீயே.

   (இ-ள்.)   காமரும் -   விரும்பத்தக்க,    துந்துபி   -    தேவ
வாத்தியங்கள், கறங்க - சப்திக்க, கடி - வாசனை பொருந்திய, மா -
சிறந்த,   மலர்    மழை  -    புஷ்ப   வருஷங்களை,  பொழிய -
சதுர்ணிகாயாமரர்கள்  சொரிய,  கவரி  -   சாமரைகள்,   பொங்க -
அசைய,     தேமரும்   -     வாசனையைச்    சேர்ந்த,   பூம் -
புஷ்பங்களையுடைய,   பிண்டியின்கீழ் - அசோக விருட்சத்தின் கீழ்,
மண்டலம் போய் - பிரபாமண்டல ஒளியானது சென்று, திசைகுலவ -
திக்குகளில்  வியாபிக்க,  திங்கள்  வட்டந்தாமொரு  மூன்றனைய -
மூன்று  ஸம்பூர்ண  சந்திர  மண்டலங்களை  யொன்றின்மேலொன்று
அடுக்கிட்டு     வைத்ததை    யொப்பாகிய,    மணி  -   அழகிய
ரத்தினத்தாலாகிய தண்டை