சமவசரணச்சருக்கம்565


Meru Mandirapuranam
 

யுடைய,  முக்குடைக்கீழ்  -  தவள  சத்திரத்திரயத்தின் கீழ், மிக்க -
மிகுதியாகிய,  வினை  -  கர்மங்கள்,   உடைய  -  கெடும்படியாக,
செல்லும் - நடக்கின்ற,  சேமமுடை  - க்ஷேமகரத்தையுடைய, நெறி -
ரத்னத்திரயமாகிற     மோட்ச     மார்க்கத்தை,        அருளி -
திவ்யத்வனியாலுபதேசித்து,  சீயவணை  -    சிம்மாசனத்தின்மேலே,
அமர்ந்தனை - பொருந்தி யிருக்கின்ற ஸ்வாமியே!,  எம் - எங்கட்கு,
செல்வன்   -  ஸம்பத்தை  யளிக்கின்ற   நாதனானவன்,   நீயே -
நீயேயாகின்றாய், (என்றும் துதித்தார்கள்), எ-று. (152)

வேறு.

 1200. இனையன துதியினோ டிறைஞ்சு மெல்லையின்
      வினைகளின் வயறுகள் வெந்த மைந்தர்கண்
      முனிமையின் வடிவினை முடிய நின்றுதம்
      வினைகளை முதலற வெறிய வெண்ணினார்.

   (இ-ள்.)   இனையன -  இத்தன்மையனவாகிய,  துதியினோடு -
ஸ்தோத்திரங்களோடு,  இறைஞ்சும்  - ஜினேந்திரனை வணங்குகின்ற,
எல்லையில்   -   காலத்தில்,   வினைகளின்  வயறுகள்  -  கர்மக்
கூட்டங்களின்   இருக்கைகளானவை,  வெந்த  -    வேக்காடுற்றன,
(அதாவது :    ஸ்திதிகாண்ட     காதகங்களாகக்   குறைவுபட்டன),
மைந்தர்கள் -  அப்படிப்பட்ட  ஸம்மியக்துவ   குணோத்  கிருஷ்ட
பரிணாமமுடைய இம்மேருமந்தரரென்கிற இருவர்களும், முனிமையின்
வடிவினை - முனிவரர்  ரூபமாகிய  நிர்க்கந்த  தீக்ஷையை,  முடிய -
அடையும்படியாக,  நின்று  -  அச்சமவசரணத்தில்  நின்று,   தம் -
தங்களுடைய,  வினைகளை  -  கர்மங்களை,  முதலற - முழுமையும்
நீங்கும்படி, எறிய - கெடுப்பதற்கு,  எண்ணினார்  -  நினைத்தார்கள்,
எ-று. (153)

 1201.  ஏத்தருங் குணத்தவத் திறைவ யாமுடைக்
      கோத்திரங் குலமிவை யருளு வாழிநீ
      நீத்தரும் பிறவிநீர்க் கடலை நீந்துநற்
      றேப்பையாந் திருவுரு வென்றி றைஞ்சிடா.

    (இ-ள்.) (அப்படி நினைத்தவர்கள்), ஏத்தரும் - ஸ்துதித்தற்கரிய,
குணத்து   -   அனந்த  ஞானாதி  குணங்களையுடைய,   தவத்து -
தபஸையுடைய,   (கணதராதி   ரிஷியராதியர்களுக்கு),     இறைவ -
நாதனாகிய ஸ்வாமியே!,  யாமுடை -  எங்களுடைய,   கோத்திரம் -
கோத்திரமும், குலம் -  குலமும்,  இவை -  இத்தன்மையாக உச்சைர்
கோத்திரமும்  அரசர்   குலமுமாகும்,   (ஆகையால்),   நீத்தரும் -
கடத்தற்கரிய,   பிறவி   நீர்க்கடலை   -    ஸம்ஸாரமாகிற    ஜல
ஸமுத்திரத்தை,  நீந்தும் -   கடக்கும்படியான, நல் -  நன்மையாகிய,
தேப்பையாம் - தெப்பமாகிற, திருவுருவு -