1204. மற்புயத் தார்மயிர் வாங்கி நின்றவர்
கற்பக மிலைமலர் கழன்ற தொத்தனர்
மற்றுவா னவரந்த மயிரை மாலையாற்
சுற்றிவான் கடலிடைத் தொழுதிட் டார்களே.
(இ-ள்.)
மயிர் - தலை மோவாய் மீசை
கன்னம் ஆகிய
இவைகளின் மயிர்களை, வாங்கி - தீக்ஷா விதிப்படி
பரிகரித்து,
நின்றவர் - நின்றவர்களாகிய, மற்புயத்தார் - மல்லயுத்தஞ்
செய்வதில்
சிறந்த தோள்களையுடைய இந்த மேருமந்தரரென்கிற
இருவர்களும்,
கற்பகம் - கற்பக மரமானது, இலை -
இலைகளையும், மலர் -
புஷ்பங்களையும், கழன்ற தொத்தனர்
- உதிர்த்திருந்ததற்கு
ஒப்பானார்கள், மற்றும் பிறகு, வானவர் - தேவர்கள், அந்த மயிரை -
அந்த ரோமங்களை, மாலையால் - பூமாலைகளால்,
சுற்றி -
சூழச்சுற்றி, தொழுது - வணங்கி, வான் - வெளுப்பாகிய, கடலிடை -
க்ஷீர ஸமுத்திரத்திலே, இட்டார்கள்
- கொண்டு போய்ப்
போட்டுவிட்டார்கள், எ-று. (157)
1205. சீலமும் வதங்களுஞ் செறிந்த வெல்லையின்
மாலையுஞ் சாந்தமு மேந்தி வானவர்
கோலமா தவர்குணம் புகழ்ந்தி றைஞ்சினா
ரேலவந் திருத்தியே ழடைந்த வென்பவே.
(இ-ள்.) சீலமும் -
சீலாச்சாரங்களையும், வதங்களும் -
பஞ்சமஹா விரதங்களையும், செறிந்த - (இவ்விருவர்களும்) சேர்ந்த,
எல்லையில் - காலத்திலே, வானவர் -
தேவர்கள், மாலையும் -
பூமாலைகளையும், சாந்தமும் - சந்தனங்களையும், ஏந்தி -
கொண்டு
அர்ச்சித்து, கோலம் - அழகாகிய, மாதவர்
- மஹா தபஸையுடைய
இவ்விருவர்களுடைய, குணம் -
ஸம்மியக்ஞானாதி குணத்தை,
புகழ்ந்து - புகழ்ச்சி செய்து, இறைஞ்சினார் - வணங்கினார்கள், ஏல
வந்து - இவர்கள் குணோத்
கிருஷ்டத்திற்கு இசைய வந்து,
இருத்தியேழ் - ஸப்தரித்திகளும், அடைந்த - சேர்ந்தன, எ-று.
என்ப - அசை. (158) 1206. போதியா றைந்துமா மருந்து மாதவ
நீதியா னாற்சுவை வலிகண் மூன்றிரண்
டோதினார் குறைபடா வுறையு ளூணிவை
யாதியாம் மாதவ ரிருத்தி வண்ணமே. (இ-ள்.) ஓதினார் - இங்குச் சொல்லப்பட்டவர்களாகிய, மாதவர் -
மஹாதபஸையுடையவர்களுடைய, இருத்தி - ரித்தியினது, வண்ணம் -
விதமானது,
|