றெய்தச் சென்றிடை
- ஏழுகயிறுயர்ந்த மத்திமலோகத்தில்,
விழுந்தவாறு - பூர்வாபர பாகத்தில் ஒரு
பக்கத்துக்கு மூன்றாக
இரண்டு பக்கத்துக்கும் அந்த ஆறு கயிறு குறைந்து, ஒழிந்தது -
மீந்து நின்றது, மேன்முகம் - மேலளவானது, ஒன்றாகும் - ஒரு
கயிறாகும், எ-று. (168)
1216. அரைமுழ மேழுசென் றங்கு நான்முழம்
பெருகவிவ் வாற்றினாற் பெருகிச்
சென்றுமே
லரையெழு கயிற்றினைங் கயிற
கன்றுமேற்
பெருகிய படியினாற் பின்சு ருங்குமே.
(இ-ள்.)
அரைமுழமேழு சென்றங்கு - மூன்றரை முழம் சென்ற
அவ்விடத்தில், நான் முழம் பெருக
- நாலு முழம் விரிவாக,
இவ்வாற்றினால் - இந்தக் கிரமத்தினால்,
பெருகிச் சென்று - ஒரு
கயிறகன்ற மத்திம லோகத்தினின்றும் பூர்வாபரபாக
மிரண்டிடத்தும்
கிரமத்தால் விரிவாகிச் சென்று,
மேல் - மேலே, அரையெழு
கயிற்றின் - மூன்றரைக் கயிறுயர்ந்த
பிரம்ம கல்பாந்தியத்தில்,
ஐங்கயிறகன்று - ஐந்து கயிறகலமாகி, பெருகியபடியினால் - பெருகிய
கிரமம்போல, பின் - பிற்பாடு, மேல்
- மேலே, சுருங்கும் - சுருக்கமாகும், எ-று. (169)
1217. பொதுவினா லொன்றுமாம் நாளி
பாயிரம்
விதியினா லுலகிரண் டாக வேண்டினார்
முதனடு விறுதியான் மூன்று மாகினாற்
கதியினா னிலத்தினான் காகு மென்பவே. (இ-ள்.)
முழம் - முழத்தினாலாவது,
பொதுவினால்
- ஸாமான்யத்தினால், உலகு -
லோகமானது, ஒன்றுமாம் -
ஒன்றேயாகும், நாளி - த்ரஸ
நாளிகையென்றும், பாயிரம் -
பாஹ்யமென்றும், விதியினால் - இந்த
விதியினாலே, இரண்டாக
வேண்டினார் - இரண்டாகவும் விரும்பிச் சொன்னார்கள், முதல் -
அதோலோகமும், நடு -
மத்திமலோகமும், இறுதியால் -
ஊர்த்துவலோகமுமாகிய இம்மூன்றினால், மூன்றுமாகி - மூன்றாகியும்,
நாற்கதியினான் - (நாரகதிரியக்
மனுஷ்ய தேவரென்னும்)
சதுர்கதிகளினால், நிலத்தின் - பூமிவகையின், நான்காகுமென்ப -
நாலாகுமெனவும் சொன்னார்கள், எ-று. (170) 1218.
அஞ்சுமாம் பஞ்சத்தி காயத் தாறுமா
மெஞ்சிய காலத்தோ டேழு நாரகர்
நஞ்சுதா ரிகணர ரொளியர் மேலவ
ரஞ்சொலா ரிலாதவ ரகதி
யார்க்கிடம். (இ-ள்.) பஞ்சத்தி
காயத்து - பஞ்சாஸ்திகாயங்களினாலே,
அஞ்சுமாம் - லோகமானது
ஐந்துமாகும், எஞ்சிய
-
பஞ்சாஸ்திகாயத்தோடு கூடி மிஞ்சிய,
|