காலத்தோடு - காலத்திரவியத்தோடு, ஆறுமாம் - ஆறுமாகும், நாரகர்
- நரகர் வசிக்கும் நரகலோகமும், நஞ்சுதாரிகள் -
பவணர் வசிக்கும்
பவணலோகமும், நரர் - மனுஷ்ய
லோகமும், ஒளியர்.
ஜோதிஷ்கருலகமும், மேலவர் - கல்பலோகமும், அம் - அழகிய,
சொலார் - சொல்லையுடைய ஸ்த்ரீமார்கள்,
இலாதவர் - இல்லாத
அஹமிந்திரர் தங்கியிருக்கும் அஹமிந்திரலோகமும், அகதியார்க்கு -
மோக்ஷகதியையுடைய ஸித்த
பரமேஷ்டிகளுக்கு, இடம் -
ஸ்தானமாகிய ஸித்திக்ஷேத்திரமும்,
(ஆகிய இவைகளால்), ஏழு -
ஏழும் ஆகும், எ-று. (171)
1219. நிகோதமே னிரையங்க ளஞ்சு தன்னிடைப்
பகாதள வகலமோர் கயிற்ற வாகுமே
மிகாதொரு கயிறுதான் மேரு வெய்திடா
பகாநர கிரண்டுமேற் பவணம்
பத்துமாம்.
(இ-ள்.)
நிகோதம் - (கிழக்கு மேற்கு ஏழுகயிறகலமும்
தெற்கு
வடக்கு ஏழுகயிறு விஸ்தீர்ணமுமாகிய லோகத்தின்
அடியிலே நாலு
திக்குகளிலும் மூன்று மூன்று கயிறு
விஸ்தீர்ணம் பாஹ்யமாகவும்
நடுவில் ஒரு கயிறகல நீளமுமாகிய த்ரஸ நாளிகையின் அடியினின்று)
நிகோதமும், மேல் - அதற்குமேல், நிரயங்களஞ்சு தன்னிடை -
ஐந்து
நரக பரியந்தம், அகலம் - அகலம், பகாதளவு
- முன் சொல்லாத
அளவு, (அதாவது : நீளம் உன்னதம்),
ஓர் கயிற்றவாகும் -
ஒவ்வொன்று ஒவ்வொரு கயிறு அகலம் நீளம் உன்னதமுடையதாகும்,
மிகாது - (லோகமத்திமம்வரையில்) மீந்து நின்றது, ஒரு கயிறுதான் -
ஒரு கயிறுன்னதப் பிரமாணமேயாம், மேருவெய்திடா -
மஹாமேரு
பர்வத மூலம்வரையில் அடைந்து,
பகா - முன் சொல்லாத,
நரகிரண்டும் - இரண்டு நரகங்களும், மேல்
- அதற்கு மேல்
இராநின்ற, பவணம்பத்தும் - பத்துவிதமாகிய பவணலோகமும்,
ஆம்
- அந்த ஒரு கயிறுப் பிரமாணத்திலாகும், எ-று. (172)
1220. ஒன்றரை யொன்றரை யரையொ டாறுமாய்
நின்றவொண் டுறக்கமோர் கயிறு
நின்றவா
மன்றியேழ் நிலப்புரை நாற்பத்
தொன்பதிற்
சென்றவிந் திரகத்தெண் டிசையுஞ்
சேணியே. (இ-ள்.)
ஒன்றரை - பூமிக்குமேல் ஒன்றரைக் கயிறுன்னதம்,
(ஸௌதர்ம ஈசான கல்பமும்), ஒன்றரை - அதன்
மேலொன்றரைக்
கயிறுன்னதம், (ஸநத்குமார மாஹேந்திர கல்பமும்),
அரையொடு -
அதற்கு மேல் அரையரைக் கயிறுன்னதத்தோடு கூடியதாகி,
ஆறுமாய்
- மற்ற ஆறுயுகளங்களுமாகி, நின்ற - அதற்கு மேல் மீந்திரா நின்ற,
ஓர் கயிறு - ஒரு கயிறுன்னதத்தில், ஒண் - ஒளிபொருந்திய,
துறக்கம்
- அஹமிந்திரலோகமும், (ஸித்திக்ஷேத்திர பரியந்தம்), நின்றவாம் -
|