578மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

சிகரங்களினால், அம் - அழகிய, நல் - நன்மையாகிய, உருக்கியும் -
ருக்மிபர்வதமும், சிகரியாம் - சிகரிபர்வதமுமாகிய, மலைதமை - இந்த
ஆறு குலகிரி  பர்வதங்களை,  நடுவுடைய -  நடுவில் உடைத்தாகிய,
ஏழ்நாடு    -  பரதாதி  ஏழுநாடுகளாகும்,    இவற்றினுள்  -  இந்த
ஏழுநாடுகளுக்குள், பரதம் - தெற்கிலுள்ள பரதக்ஷேத்திரமும், ரேவதம்
- வடக்கிலுள்ள  ஐராவத  க்ஷேத்திரமும்,  சமைய  மாறுடையவாம் -
ஆறு காலங்களையுடையனவாம், எ-று. (182)

 1230. நன்மையு நன்மையு நன்மை யாயதும்
     நன்மையிற் றீமையுந் தீமை நன்மையுந்
     திண்ணிய தீமையுந் தீமை தீமையென்
     றெண்ணிய காலமேற் றிழிவை யாக்குமே.

   (இ-ள்.)  சொல்லிய     -      சொல்லப்பட்ட,      நன்மையு
நன்மையும்  -  நன்னற்காலமும்,  நன்மையாயதும்  -   நற்காலமும்,
நன்மையிற்றீமையும்   -    நற்றீக்காலமும்,      தீமைநன்மையும் -
தீநற்காலமும், திண்ணிய  -   திண்மை   பொருந்திய,    தீமையு -
தீக்காலமும், தீமை தீமையென்று - தீத்தீக்காலமுமென்று, எண்ணிய -
எண்ணப்பட்ட,  காலம் -  காலங்கள், ஏற்று - உத்ஸர்ப்பிணியையும்,
இழிவு - அவஸர்ப்பிணியையும், ஆக்கும் - உண்டாக்கும், எ-று. (183)

 1231. ஒருமுழம் பதினையாண் டுந்தி யுந்திமேல்
     வருசிலை யாறாயி ரம்பல்ல மூன்றெய்திப்
     பெருகிய பரிசினாற் பின்சு ருங்கிவந்
     தொருமுழம் பதினையாண் டாமொர் கற்பமாம்.

   (இ-ள்.)  (உத்ஸர்ப்பிணி காலமானது),  ஒரு  முழம் -  ஒரு முழ
உன்னதத்தினின்றும்,    பதினையாண்டு   -   பதினைந்து   வருஷ
ஆயுஷ்யத்தினின்றும்,  உந்தி  உந்தி  -  பெருகிப்  பெருகி, மேல் -
மேலே,  வரு  -  வரப்பட்ட,  சிலை  -  வில்லுகள்,  ஆறாயிரம் -
ஆறாயிரம் உன்னதமும்,  பல்லமூன்று  -  மூன்றுபல்ல ஆயுஷ்யமும்,
எய்தி - அடைந்து,  (அவசர்ப்பிணி காலமானது), பெருகிய பரிசினால்
- பெருகிய கிரமத்தினால்,  பின் -  பிறகு, சுருங்கி வந்து - குறைந்து
வந்த,   ஒரு  முழம் -  ஒரு  முழ  உன்னதமும்,  பதினையாண்டு -
பதினைந்து  வருஷ  ஆயுஷ்யமும், ஆம் - ஆகும், ஓர் கற்பமாம் -
(இந்த   உத்ஸர்ப்பிணி    அவஸர்ப்பிணி யிரண்டும்   சேர்ந்து) ஒரு
கல்பமாகும், எ-று. (184)

 1232. ஆழி கள்கோடா கோடியை யிரண்டினில்
     நாலுமூன் றிரண்டொன்றா நாலுகா லங்களீற்
     றாழியி லாண்டுநாற் பத்தீ ராயிரம்
     மேலவை யிரண்டிற்கும் விதிக்கப் பட்டவே.