சமவசரணச்சருக்கம்579


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)     ஆழிகள்   கோடா   கோடி   யையிரண்டினில் -
(அவஸர்ப்பிணிக்கேற்பட்ட)  பத்துக்   கோடா  கோடி    கடற்கால
காலத்தில், நாலு - (நன்னற்காலத்துக்கு) நாலு கோடா கோடி கடலும்,
மூன்று - (நற்காலத்துக்கு) மூன்று கோடா கோடி கடலும், இரண்டு -
(நற்றீக் காலத்துக்கு) இரண்டு  கோடா கோடி  கடலும்,  ஒன்று - (தீ
நற்காலத்துக்கு)  ஒரு  கோடா  கோடி கடலும்,   நாலு காலங்கள் -
இப்படி  நாலு  காலங்களிலே,  ஆம்  - ஆகும்,   ஈற்றாழியில் - தீ
நற்காலத்தின் கடைசீக்  கடற்காலத்தில்,  ஆண்டு நாற்பத்தீராயிரம் -
நாற்பத்தீராயிரம்   வருஷங்கள்,    மேலவையிரண்டிற்கும்   - முன்
சொல்லாத தீக்காலம் தீத்தீக்காலமாகிய இரண்டிற்கும், விதிக்கப்பட்ட
- இருபத்தோராயிரம்       இருபத்தோராயிரம்      வருஷங்களாக
சொல்லப்பட்டனவாம், எ-று. (185)

 1233. கருமமும் போகமு மிருமை யுமுடன்
     மரியமுன் னிலங்களுட் பரத ரேவத
     மிருமைய முதல்முக் காலம் போகத்தின்
     மருவிய கருமத்தை மற்றை மூன்றுமே.

   (இ-ள்.)    முன்னிலங்களுள்  -  முன்னாலே   சொல்லப்பட்ட
அந்த ஏழு நாடுகளினுள்ளே, பரதம் - பரத க்ஷேத்திரமும்,  ரேவதம்
- ஐராவத க்ஷேத்திரமும், கருமம் - கரும பூமியாகவும்,  போகமும் -
போக பூமியாகவும், இருமையும் - இந்த இரண்டையும், உடன் -  ஒரு
தன்மையாக, மரிய - சேர்ந்திராநின்றன, இருமைய - இந்த இரண்டில்,
முதல்  முக்காலம்  -    முதலிலே  சொல்லப்பட்ட  (நன்னற்காலம்
நற்காலம் நற்றீக்காலமாகிய இந்த)  மூன்று  காலங்களும், போகத்தின்
மருவிய - போக  பூமியைச்  சேர்ந்திராநின்றன, மற்றை  மூன்றும் -
(தீநற்காலம் தீக்காலம் தீத்தீக்காலமாகிய  இந்த) மூன்று காலங்களும்,
கருமத்தை மருவிய - கரும பூமியைச் சேர்ந்திராநின்றன, எ-று. 

   ‘மருவிய? என்பது இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. (186)

 1234. நன்மையுட் டீமையுட் டீமை நன்மையுட்
     பன்னரும் பிரமரும் பரம தீர்த்தரும்
      மன்னரும் பலவரும் வாசு தேவருந்
     தன்னுரு பகைவருஞ் சரமர் தாமுமாம்.

    (இ-ள்.)    நன்மையுட்டீமையுள்  -       அவஸர்ப்பிணியின்
மூன்றாங்காலமாகிய நற்றீக்காலத்தினுடைய  அந்தியத்திலேயும், தீமை
நன்மையுள் -  நாலாங்காலமாகிய  தீ  நற்காலத்திலும், பன்னரும் -
சொல்வதற்கரிய,     பிரமரும்    -     பிரம்மாக்களும்,    பரம -
உத்கிருஷ்டமாகிய   குணமுடைய,   தீர்த்தரும்  - தீர்த்தங்கர பரம 
தேவர்களும்,  மன்னரும்  -   சக்ரவர்த்திகளும்,        பலவரும் -
பலதேவர்களும், வாசுதேவரும் - வாஸு