580மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

தேவர்களும்,   தன்   -   இவ்வினந்தன்னிலே,  உறு - பொருந்திய,
பகைவரும்  -  பகைஞரும் (அதாவது :  பிரதி  வாஸுதேவர்களும்),
சரமர்தாமும் - இன்னும் அனேகமாகிய  சரமதேகதாரிகளும், ஆம் -
உற்பத்தியாம், எ-று. (187)

 1235. உத்தர தெக்கண குரவ முத்தமம்
     மத்திம மரிவரு டம்மி ரம்மிய
     மத்தக மைவத மைரண்ணி யம்மிவை
     நித்தமாய்ப் போகங்க ணின்ற பூமியே.

   (இ-ள்.)    உத்தரகுரவம்   -      உத்தரகுரு   க்ஷேத்திரமும்,
தெக்கணகுரவம் -தக்ஷிணகுரு க்ஷேத்திரமும், உத்தமம் - உத்தமபோக
பூமியாகவும்,  அரிவருடம் - ஹரிவருஷ க்ஷேத்திரமும், இரம்மியம் -
ரம்மியக க்ஷேத்திரமும், மத்திமம் - மத்திமபோக பூமியாகவும், ஐவதம்
- ஹைமவத    க்ஷேத்திரமும்,  ஐரண்ணியம்  -   ஹைரண்ணியவத
க்ஷேத்திரமும்,  அத்தகம்  -  ஜகன்னியபோக  பூமியாகவும், இவை -
இந்த க்ஷேத்திரங்கள்,  நித்தமாய்  -  நித்தியங்களாய், போகங்கள் -
போகங்களுடனே கூடி,  நின்ற  - நிலைபெற்றிராநின்ற, பூமி - போக
பூமிகளாகும், எ-று.

 1236. மூன்றிரண் டொருபல்ல முறையு ளாயுக
     மான்றவில் லாயிர மாறு நாலிரண்
     டூன்றிய வோக்கமூன் றிரண்டோர் நாள்விடா
     தோன்றிய பசிகெட வமுத முண்பரே.

   (இ-ள்.)  மூன்று  பல்லம்  -  (உத்தமபோக    பூமியிலிராநின்ற
மனுஷ்யர்களுக்கு)   மூன்று  பல்லமும்,  இரண்டு  -  (மத்திமபோக
பூமியிலிராநின்ற மனுஷ்யர்களுக்கு) இரண்டு பல்லமும், ஒரு பல்லம் -
(ஜகன்னிய  போகபூமி  மனுஷ்யர்களுக்கு)  ஒரு  பல்லமும், முறை -
கிரமமாக, ஆயுகம் - ஆயுஷ்யங்கள், உள - உண்டாகும், ஆன்ற -
பெரிதாகிய,  வில் -  விற்கள்,  ஆயிரமாறு -  (உத்தமபோக   பூமி
மனுஷ்யர்களுக்கு)   ஆறாயிரமும்,   நாலு  -  (மத்திமபோக   பூமி
மனுஷ்யர்களுக்கு) நாலாயிரமும்,  இரண்டு  -  (ஜகன்னிய  போகபூமி
மனுஷ்யர்களுக்கு)   இரண்டாயிரமும்,  ஊன்றிய -  உண்டாகப்பட்ட,
ஓக்கம் - உன்னதங்களாகும்,  மூன்று  நாள்  விடா  - (உத்தமபோக
பூமியிலிராநின்ற மனுஷ்யர்கள்)  மூன்று  நாளிடைவிட்டும், இரண்டு -
(மத்திமபோக பூமி மனுஷ்யர்கள்)  இரண்டு  நாள் இடைவிட்டும், ஓர்
நாள்  விடா -  (ஜகன்னிய  போகபூமி   மனுஷ்யர்கள்)  ஒரு  நாள்
இடைவிட்டும்,  தோன்றிய  - தங்களுக்குண்டாகிய, பசி - பசியானது,
கெட  -  நீங்கும்படியாக,  அமுதம்  -  அமிர்தத்தை,   உண்பர் -
பொசிப்பார்கள், எ-று. (189)

 1237. உரைத்தமுக் காலமூன் றாதி யுள்ளுமாம்
      நிரைத்தவைஞ் ஞூறுவிற் புவ்வ கோடியு