களாலும், நாலு நாலிரட்டியாய் -
நாலை நான்குதரம் இரட்டித்ததாகிய
முப்பத்திரண்டாகிய, விதேகநாடு -
விதேகநாடுகள், நின்ற -
இராநின்றன, எ-று. (195)
1243. சீதையின் வடகரை யாதியாய் வலம்முறை
யோதியவந் நாடுகள் நீதியோடு
நின்றவே.
(இ-ள்.)
ஓதிய - சொல்லப்பட்ட,
அந்நாடுகள் -
அந்தக் கச்சா முதலாகிய முப்பத்திரண்டு நாடுகளும், சீதையின் -
ஸீதாநதியினுடைய, வடகரை - வடகரையினின்றும்,
ஆதியாய் -
முதலாகி, வலம்முறை . பிரதக்ஷிணமாக, நீதியோடு - வரிசையோடு,
நின்ற - இராநின்றன, எ-று. (196)
1244. சொல்லியவந் நாடுகள் வெள்ளியம் மலையினுஞ்
சுல்லையா றிரண்டினும் நல்லகண்ட மாறுமாம். (இ-ள்.)
சொல்லிய - சொல்லப்பட்ட, அந்நாடுகள் -
அந்தக்
கச்சா முதலிய முப்பத்திரண்டு நாடுகளும், வெள்ளியம்மலையினும் -
ஒவ்வொரு விஜயார்த்த பர்வதத்தினாலும்,
சுல்லையாறிரண்டினும் -
இரண்டு க்ஷுல்லக நதிகளினாலும், நல்ல -
நன்மையாகிய, கண்டம்
ஆறுமாம் - (ஒவ்வொரு நாடுகளில்) ஆறு கண்டங்களாகும், எ-று. (197)
1245. செவ்விலைந்து நூறுயர்ந்து புவ்வகோடி யாயுக
மிவ்வகைய நாட்டுளென்றும் வெவ்வினைக டீர்ப்பரே.
(இ-ள்.) இவ்வகைய - இந்த பிரகாரமாகிய, நாட்டுள் - இந்த
முப்பத்திரண்டு நாடுகளிலேயும், (இராநின்ற
மனுஷ்யர்கள்), செவ் -
செவ்விதாகிய, வில் - வில்லுகள், ஐந்துநூறுயர்ந்து -
ஐந்நூறுன்னத
முடையவர்களாகி, புவ்வகோடியா யுகம் - பூர்வகோடி ஆயுஷ்யத்தில்,
என்றும் - (காலவேறுபாடில்லாமல்) எப்பொழுதும், வெவ்வினைகள் -
கர்மங்களை, தீர்ப்பர் - கெடுத்து முக்தியையும் அடைவார்கள், எ-று. (198)
1246. சுல்லைமேரு நான்குடைய நல்லநாடு
நான்கினு
மில்லைவேறு பாடிவட்
சொன்னசொன்ன யாவையும். (இ-ள்.) சுல்லைமேரு - க்ஷுல்லக
மஹம்மேரு, நான்குடைய -
நாலையுடைத்தாகிய, நல்ல - நன்மையாகிய,
நாடு நான்கினும் -
(தாதகீஷண்டம் புஷ்கரார்த்தங்களி
லிராநின்ற) நாலு விதேக
க்ஷேத்திரங்களிலும், இவண் - இந்த
ஜம்பூத்வீபத்தில், சொன்ன
சொன்ன - சொல்லப்பட்ட
சொல்லப்பட்ட, யாவையும் -
சமஸ்தங்களும் , இல்லை
வேறுபாடு - வேறுபாடில்லாமல்
சமானமாயிரா நின்றன, எ-று. (199)
|