சமவசரணச்சருக்கம்585


Meru Mandirapuranam
  

 1251. முடிந்ததீபம் சாகரத் தடைந்தவை விலங்குமிவ்
      விடங்களெண் ணிறந்தன முடிந்திடா வுரைக்கவே.

    (இ-ள்.)      முடிந்த  -   அந்தியத்திலிராநின்ற,     தீபம் -
ஸ்வயம்புரமணார்த்த த்வீபத்திலும்,   சாகரத்து   -    ஸ்வம்புரமண
ஸமுத்திரத்திலும், இவ்விடங்கள் - இந்த இரண்டரை த்வீபம்  இரண்டு
ஸமுத்திரங்களிலும்,  அடைந்தவை  -  சேர்ந்திரா நின்றவைகளாகிய,
விலங்கும் - த்வீந்திரிய  திரிந்திரிய  சதுரிந்திரியமாகிய விகலேந்திரிய
விலங்குகளும் பஞ்சேந்திரிய விலங்குகளும், எண்ணிறந்தன - கணக்கு
மீறினவையாயிராநின்றன,   உரைக்க   -   அவை  இவ்வளவென்று
கணக்கிட்டுச் சொல்வதற்கு, முடிந்திடா - முடியா, எ-று. (204)

வேறு.

 1252. ஏழு சாகரத் தீவத்தி னெட்டதாய்ச்
      சூழ்கி டந்தநந் தீச்சுர தீவதி
      லூழி யூழிவா னோர்வந் திறைவனைத்
      தாழு மற்றதன் பெற்றியைச் சாற்றுவாம்.

     (இ-ள்.)     ஏழுசாகரத்தீவத்தின்   -    ஜம்பூத்வீப   முதல்
ஏழுத்வீபங்களினின்றும்  மஹாலவண  ஸமுத்திரமும்  முதல்    ஏழு
சமுத்திரங்களினின்றும், (தாண்டி), எட்டதாய் - எட்டாவது த்வீபமாகி,
சூழ்கிடந்த - ஏழு த்வீபங்களையும் ஏழு ஸமுத்திரங்களையுஞ் சூழ்ந்து
வளையாக்கிருதமாய்       இராநின்ற,       நந்தீச்சுவரத்தீவதில் -
நந்தீசுவரத்வீபத்தில்,  ஊழி ஊழி - அனாதி காலமாக முறைமையால்,
வானோர் -  சதுர்ணிகாயாமரர்கள்,  வந்து  -   அந்தத்வீபத்திலுள்ள
அக்கிருத்திமசைத் யாலயங்களிற்      சேர்ந்து,       இறைவனை -
ஜினேந்திரப்பிரதிமைகளை, தாழும் - வணங்கி  பூஜிக்கின்ற, அதன் -
அந்த நந்தீஸ்வரத்வீபத்தின், பெற்றியை - பெருமையை, சாற்றுவாம் -
இனிச் சொல்லுவோம், எ-று. (205)

வேறு.

 1253. அறுபத்து மூன்றினோ டாய நூற்றினா
      லெறியப்பட் டிருந்தன கோடி யோசனை
      செறிவுற்ற விலக்கமெண் பத்து நான்கொடு
      மறுவற்ற தீவத்துள் ளகல மாகுமே.

    (இ-ள்.) அறுபத்து மூன்றினோடு - அறுபத்து மூன்றோடு,  ஆய
-   கூட்டப்பட்ட,   நூற்றினால்    -   நூற்றினாலே   (அதாவது :
நூற்றியறுபத்து          மூன்றினாலே),      எறியப்பட்டிருந்தன -
பெருக்கப்பட்டிருந்தனவாகிய, கோடி - நூற்றியறுபத்து