மூன்று கோடியோடு, செறிவுற்ற - சேர்க்கப்பட்ட, இலக்கமெண்பத்து
நான்கொடு - எண்பத்து நாலு
லட்சத்தோடாகிய, ஓசனை -
நூற்றறுபத்து மூன்று கோடியே
யெண்பத்து நாலு லட்சம்
யோஜனைகள், மறுவற்ற - குற்றமற்ற, தீவத்து
- அந்த நந்தீஸ்வர
த்வீபத்தின், உள் உள்ளேயாகிய, அகலம் -
அகலமாக, ஆகும் -
ஆகாநின்றது, எ-று. (206)
1254. நிலங்கள்பொன் மணிகளா னிறைந்தி
ருந்தன
விலங்கலுங் கயங்களும் வீத
ராகரைப்
புலங்களால் வெல்வன போக
பூமியோ
டிலங்குவா னவரிடந் தன்மை யேசுமே.
(இ-ள்.)
நிலங்கள் - அந்த நந்தீசுவர த்வீபத்தின்
பூமிகள்,
பொன் - ஸ்வர்ணங்களினாலும், மணிகளால் - இரத்தினங்களினாலும்,
நிறைந்ததிருந்தன - நிறைவு
பெற்றிராநின்றன, விலங்கலும் -
அதிலிருக்கும் பர்வதங்களும், கயங்களும்
- தடாகங்களும்,
வீதராகரை - ஆசையற்றவர்களையும், புலங்களால் - விஷயங்களால்,
வெல்வன - ஜெயிக்கப்பட்டன போன்று
மிகுதியும் அழகுடையன
வாயிரானின்றன, (இப்படிப்பட்ட
அழகுடையதாகையால்
அந்தத்வீபமானது), போக பூமியோடு
- போக பூமியோடும்,
(அதுவல்லாமலும்), இலங்கும் - விளங்காநின்ற, வானவரிடந்
தன்னை
- தேவருலகத்தினையும், ஏசும் - இகழ்ச்சி பண்ணும், எ-று (207)
1255. கண்ணையும் மனத்தையுங் கவர்ந்து
கொள்வன
வண்ணமே கலையினார் வடிவு
போலவே
விண்ணவர்க் கிறைவரும்
விடாத வேட்கைய
வெண்ணிலா விடங்களா லியன்றி
ருந்ததே. (இ-ள்.)
கண்ணையும் -
பார்க்கின்றவர்களுடைய
நேத்திரங்களையும், மனத்தையும்
- இருதயத்தையும்,
கவர்ந்துகொள்வன - கிரஹித்துக் கொள்வனவாகி, வண்ணம் -
வர்ணம் பொருந்திய, மேகலையினார் -
மேகலாபரணத்தையுடைய
ஸ்த்ரீமார்களுடைய, வடிவுபோலவே - ரூபத்தைப்
போலவே,
விண்ணவர்க்கிறைவரும் - தேவேந்திரர்களும்,
விடாத - நீங்காத,
வேட்கைய - ஆசையையுடையவைகளாய்,
எண்ணிலா -
அஸங்கியாதமாகிய, இடங்களால் - லாவண்யமுடைய ஸ்தானங்களால்,
இயன்று - இசைந்து, இருந்தது - இராநின்றது, எ-று. (208)
1256. இலதைவல் லிகண்மணி யாலி யன்றுதன்
சலதிசூழ் போயது தரணி மூன்றுடை
யுலகினுக் கிறைவனா லயங்க
ளாலிம்மூ
வுலகினுக் கிறைமைகொண் டோங்கு
கின்றதே.
|