(இ-ள்.) (இன்னும்
இத்தீவானது), இலதை - இலைக்கொடிகளும்,
வல்லிகள் - கோல்கொடிகள்
முதலாகிய கொடிகளும்,
மணியாலியன்று - (அலங்கிருதமாகும்படி)
இரத்தினங்களால்
அமைந்ததாகி, தன் சலதி - தன்னுடைய நந்தீச்சுவர சமுத்திரமானது,
சூழ் போயது - தன்னைச் சூழ்ந்திராநின்றதாகி,
தரணி மூன்றுடை -
அதோ மத்திம ஊர்த்துவபேதத்தால் மூன்று
பீரகாரமானதரணியை
உடைய, உலகினுக்கு - இந்த லோகத்துக்கு, இறைவன் - நாதனாகிய
அருகபரமனுடைய, ஆலயங்களால்
- கோயில்களினால்,
இம்மூவுலகினுக்கு - இந்த மூன்று லோகத்துக்கும், இறைமை கொண்டு
- மேலான தன்மையைக்
கொண்டு,
ஓங்குகின்றது -
உயர்வடைந்திராநின்றது, எ-று. (209)
1257. பண்சிறைக் கிடந்தசொற் பாவை மாருடன்
விண்சிறைக் களமென விட்டு வீரனை
வண்சிறப் போடுவந் தடைந்த
வானவர்
கண்சிறைப் படுவது காமர் பூமியால்.
(இ-ள்.)
பண் - கீதமானது, சிறைகிடந்த
- தங்குதல்
கொண்டிராநின்ற, சொல் - வசனத்தையுடைய, பாவைமாருடன் -
சித்திரப்பாவைக்குச்
சமானமாகிய
தேவஸ்த்ரீகளுடன்,
(கூடிக்கொண்டு), விண் - தேவலோகமானது, சிறைக்களமென -
சிறைச்சாலைக்குச் சமமாகுமென்று, விட்டு -
அத்தேவலோகத்தை
விட்டு, வண் - வளப்பம்
பொருந்திய, சிறப்போடும் -
பூஜாத்திரவியாதி சிறப்புகளோடு, வந்து - அங்கேவந்து,
வீரனை -
அங்குள்ள கோயிலில் வீற்றிருக்கின்ற
ஜினேந்திரப் பிரதிமையை
(பூஜிக்கும்படியாக), அடைந்த
- சேர்ந்த,
வானவர் -
சதுர்ணிகாயாமரர்களின், கண் - கண்கள், காமர் -
அழகிய, பூமியால்
- அப்பூமியால், சிறைப்படுவது - தங்குதல்
கொள்ளப்படுவதாகும்,
எ-று. (210)
1258. அஞ்சன மலைசணான் காகு மாங்கதன்
மங்சிலா மாதிசை நடுவ ணின்றன
வஞ்சன மூலமா யகன்று யர்ந்தன
வெஞ்சிலா யிரம்புகை நான்கொ
டெண்பதே. (இ-ள்.)
மஞ்சிலா - குற்றமில்லாத, ஆங்கதன் - அங்கு
அந்த நந்தீசுவரத் வீபத்தினுடைய, மா - பெருமை பொருந்திய,
திசை
- மகாதிக்கு பூமிகளில், நடுவண்
- மத்தியிலே, நின்றன -
நின்றனவாகிய, அஞ்சனமலைகள்
- அஞ்சனமென்னும்
பெயரையுடைய பர்வதங்கள், நான்காகும் -
(கிழக்கில் ஒன்று
தெற்கில் ஒன்று மேற்கில் ஒன்று வடக்கில்
ஒன்று ஆக) நாலு
பர்வதங்களாகும், எஞ்சலில் - குறைவில்லாத,
அஞ்சனம் - அந்த
அஞ்சன பர்வதங்கள், ஆயிரம் புகை நான்கோடெண்பது -
எண்பத்து
நாலாயிரம் - யோஜனைகள், மூலமாயகன்று -
|