அடியாய்விசாலித்து, உயர்ந்தன -
எண்பத்துநாலாயிரம் யோஜனை
யுயர்ந்திராநின்றன, எ-று. (211)
1259. மற்றிந்த மலையின்மா திக்கின் வாவிகள்
பெற்றியாற் கிடந்தன பெரிய சாலவு
முற்றுநீர் சூழ்தலாற் றதிமு கங்களென்
றுற்றபேர் மலைகளத் தடத்தி னுள்ளவே.
(இ-ள்.)
மற்று - பின்னையும், இந்த - இப்போது சொல்லப்பட்ட
இந்த, மலையின் - ஒவ்வொரு அஞ்சன
பர்வதங்களினுடைய,
மாதிக்கில் - (கிழக்கு தெற்கு
மேற்கு வடக்கென்னும்) நாலு
திக்குகளிலும், சாலவும் பெரிய - மிகவும் பெரியனவாகிய, வாவிகள் -
தடாகங்கள், பெற்றியால் - உயர்ந்த
தன்மையோடு, கிடந்தன -
இராநின்றன, அத்தடத்தின் -
அந்தத் தடாகங்களின் மத்தியில்,
முற்றும் - எப்பக்கங்களிலும்,
நீர் சூழ்தலால் -
ஜலஞ்
சூழ்ந்திருப்பதால், ஏதிமுகங்களென்று - ததிமுகங்களென்று,
பேர்உற்ற
- பெயரையுடைய, மலைகள் - பர்வதங்கள், உள்ள - இராநின்றன,
எ-று. (212)
1260. ஆயிரம் புகைபத்தை யகன்று யர்ந்தன
வாய்மையா னீரின்மேல் வரைகள் வாவியின்
சூழுந்தான் கிடந்தநால் வனங்க டம்பெய
ரேழிலைச் சண்பகந் தேமாவ சோகமே. (இ-ள்.)
நீரின்மேல் - (அத்தடாக மத்தியில்)
ஜலத்தின்
மேல், வாய்மையால் - வாய்த்த
தன்மையினால், வரைகள் -
(இராநின்ற) ததிமுக பர்வதங்களானவை,
ஆயிரம் புகைபத்தை -
பதினாயிரம் யோஜனைகள், அகன்று
- அகலமுடையனவாகி,
உயர்ந்தன - அவ்வளவு உயரத்தையும் உடையனவாகும், வாவியின் -
அத்தடாகங்களை, சூழுந்தான்
கிடந்த - நாலுதிக்கிலும்,
சூழ்ந்திராநின்ற, நால்வனங்கள் - நாலு வனங்களாகும்,
தம் பெயர்
அவ்வனங்களின் பெயர், ஏழிலை - ஏழிலைம்
பாலைவனமும்,
சண்பகம் - சண்பகவனமும், தேமா - மாவனமும், அசோகமே -
அசோகவனமுமாகும், எ-று. (213)
1261. வனத்திடைப் புறம்படி வாவி கோணத்தின்
மனத்தினுக் கிரதிசெய் மலைக ணின்றன
தனக்குயர் வகலமா யிரங்க ளோசனை
யெனைப்பல விடங்களா லிரதி செய்யுமே.
(இ-ள்.) வனத்திடை
- அந்த வனங்களின், புறம்படி -
பாஹ்யபூமியில் (அதாவது : வெளியில்),
வாவி - ஒவ்வொரு
தடாகங்களினுடையவும், கோணத்
|