சமவசரணச்சருக்கம்589


Meru Mandirapuranam
  

தின்     -     வெளி    மூலைகளிரண்டிலும்,     மனத்தினுக்கு -
பார்க்கின்றவர்களுடைய   மனதிற்கு,    இரதிசெய்   -    ரதியைச்
செய்யும்படியான,   மலைகள்   -    ரதிகரபர்வதங்கள்,  நின்றன -
நிலைபெற்றுள்ளன (அதாவது : ஒவ்வொரு  தடாகத்தின் வனங்களின்
பாஹ்ய மூலைகளில்  ஒவ்வொன்றாக  இரண்டு  மூலைக்கும் இரண்டு
பர்வதமாய்    நாலுபக்கங்களிலும்    உள்ள     தாடாகங்களுக்கும்
அமைந்திருந்தன, தனக்கு -  அந்த  ரதிகரபர்வதம் ஒவ்வொன்றிற்கு,
உயர்வு - உன்னதமும், அகலங்கள் - அகலமும், ஆயிரங்களோசனை
- ஆயிரம் ஆயிரம்  யோஜனைகளாகும்,  எனை பல விடங்களால் -
(அந்த நந்தீசுவரத்வீபம்)  இன்னும்  பல விடங்களின் அழகுகளாலும்,
இரதி செய்யும் - பார்க்கின்றவர்களுக்கு  ஆஹ்லாதத்தைப் பண்ணும்,
எ-று.

       ‘ஏனை? என்பது, ‘எனை? எனக் குறுகி வந்தது. (214)

 1262. மலைநல மணிபொனின் மயம தாகிய
      பலவடி வுடையன பரமன் கோயில்க
      ணிலவிய மகுடமா யிலங்கும் பாரிலும்
      மலையிதும் மாயிரம் புகைக ளாழ்ந்தவே.

   (இ-ள்.)  மலை - (அந்த   நந்தீசுவரத்வீபத்திலுள்ள,   அஞ்சன,
ததிமுக, ரதிகரமென்னும்)  பர்வதங்களின் மேல், நல - நன்மையாகிய,
மணிமயம் - இரத்தின மயங்களும்,   பொனின்மயமதாகிய - சுவர்ண
மயங்களுமாகிய,  பல  -  பலவாகிய,  வடிவுடையன  -   இலக்ஷண
ரூபங்களையுடையனவாகிய,   பரமன்   -    ஜினேந்திரனாகியஅருக
பரமனுடைய,   கோயில்கள்  -   ஸ்ரீசைத்யாலயங்கள்,    நிலவிய -
பிரகாசிக்கப்பட்ட,   மகுடமாயிலங்கும்   -  கிரீடம்போல விளங்கும்,
மலையிதும்  -  இப்பர்   வதங்களெல்லாம்,  பாரிலும்  - பூமியிலும்,
ஆயிரம்   புகைகள்  -   ஆயிரம்    யோஜனைகள்,    ஆழ்ந்த -
ஆழ்ந்திராநின்றன, எ-று (215)

  1263. வனங்களுந் தடங்களும் மலையின் மாமணித்
      தலங்கண்மே னின்றன தமனி யத்தியன்
      றிலங்குதோ ரணமுடை வேதி சூழ்ந்துநல்
      லலங்கலார்ந் தருமணி யாலி யன்றவே.

     (இ-ள்.)     வனங்களும் - அந்தநந்தீசுவர த்வீபத்திலிராநின்ற
வனங்களும்,  தடங்களும்  -  தடாகங்களும், மலை - பர்வதங்களும்,
இன்  -  இனிமையாகிய,   மா  -  பெருமை  பொருந்திய,  மணி -
இரத்தினத்தினாலாகிய,  தலங்கண் மேல் - பூமியின் மேலே, நின்றன
- இராநின்றன, (ஆலயங்கள்),  தமனியத்தியன்று  - ஸ்வர்ணத்தினால்
செய்யப்பட்டு,   இலங்கும்   -   பிரகாசியாநின்ற,     தோரணம் -
தோரணங்களை,  உடை  -  உடையதாகிய, (வழிகளையுடைய), வேதி
சூழ்ந்து  -  மதில்களினால்   சூழப்பட்டு,    நல்  -  நன்மையாகிய,
அலங்கலார்ந்து  -  மாலைகளினால்  நிறைந்து, அரும் - அரிதாகிய,
மணியால்  -  இரத்தினங்களினால்,  இயன்ற  - அமைந்திராநின்றன, எ-று.