வைசயந்தன் முத்திச்சருக்கம் 59


Meru Mandirapuranam
 

தீர் -  குற்றம்  நீங்கிய,  பண்ணவர் படிமம் -  பகவானது  ரூபமான
நிர்கந்ததபசை, கொண்டார் - கைக்கொண்டார்கள், எ-று. (122)

 123. மணிமுடி கலிங்க மாலை மணித்துண ரனைய குஞ்சி
     பணியொடு பரிந்து நின்றார் பருமத யானை யொத்தார்
     குணமணி யணிந்து குன்றாப் பண்ணவர் குழாத்தைப்புக்கா
     ரிணையிலாச் சித்தி நன்னாட் டிளவர சியன்ற தொத்தார்.

   (இ-ள்.)   மணி  -  இரத்தினத்தாலாகிய,  முடி  -  முடியையும்,
கலிங்கம்   -   பட்டுவஸ்திரத்தையும்,   மாலை  -  மாலைகளையும்,
மணித்துணரனைய  - இந்திர நீலமணியின் கிரணக்கொத்துக்களுக்குச்
சமானமாகிய,   குஞ்சி   -   தலையின்  மயிர் முதலியவைகளையும்,
பணியொடு  - ஸர்வக்ஞரால் சொல்லப்பட்ட தீக்ஷாவிதியின் பிரகாரம்,
பரிந்து  -  நீக்கி, நின்றார் -  தவநிலையில்  நின்ற அவர்கள், பரு -
பருத்த,       மதயானை    யொத்தார்       -    மதயானைக்குச்
சமானமானவர்களாயும்,   (என்றதனால்,  ‘மதயானையைப்  பாகர்கள்
வசமாக்கும்பொருட்டு   அதன்   அணி  முதலானவைகளை   நீக்கி
ஆகாராதிகளையுங்  கட்டுப்படுத்த அது அக்கட்டுக்கடங்கியது போல
இவர்களும்  இந்திரியங்களை வசமாக்கி அடக்கும்பொருட்டு ஏற்பட்ட
சர்வக்ஞர்   ஆக்கினையில்   கட்டுப்பட்டு   நின்றார்கள்,"   என்பது
பெறப்படும்).  குணமணி  - ஸம்மியக்ஞானாதி  குண ரத்தினங்களை,
அணிந்து  -  தரித்து,   குன்றா  -   குறைவில்லாத,   பண்ணவர் -
முனிவர்களுடைய,    குழாத்தை    -    கூட்டத்தை,   புக்கார்   -
அடைந்தவர்களாயும்,  இணையிலா - உவமையில்லாத, சித்தி - ஸித்தி
அல்லது   மோக்ஷமென்னும்,   நல்   -   நன்மையாகிய,   நாட்டு -
க்ஷேத்திரத்தின்,    இளவரசு    -   யுவராஜபதவியில்,  இயன்றது -
பொருந்தியதை, ஒத்தார் - நிகர்த்தார்கள், எ-று.             (123)

 124. ஆங்கவ ரங்க பூவ மாதிநூ லோதி யார்க்குந்
     தாங்கருங் கொள்கை தாங்கித் தாமுடன் சென்று பின்னா
     ளோங்கிய வுலக மூன்று மொருவழிப் படுக்க லுற்றுப்
     பாங்கினால் வைச யந்தன் பருப்பத சிகரஞ் சேர்ந்தான்.

    (இ-ள்.)  ஆங்கவர் - அவ்விடத்தில்  அம்முனிவர்கள் மூவரும்,
அங்க  பூவமாதி  -  அங்காகமம்  பூர்வாகமம்  முதலாகிய,  நூல் -
பரமாகமங்களை,   ஓதி   -  படித்து,  யார்க்கும்  - எவர்களுக்கும்,
தாங்கரும்  -  தாங்குவதற்கரிதாகிய,  கொள்கை  - சாரித்திரங்களை,
தாங்கி  - தரித்து, தாம் - தாங்கள்,உடன் - அந்தக்கொள்கையுடனே,
சென்று - போய்,பின்னாள் - பிற்பட்ட நாளில், ஓங்கிய - பெரிதாகிய,
உலக   மூன்றும்   -   மூவுலகத்தையும்,   ஒருவழிப்படுக்கலுற்று  -
ஒரேதன்மையாக    வசப்படுத்த     உத்தேசித்து,    பாங்கினால் -
கிரமத்தினால்,  வைசயந்தன்  -  (அவர்களில்)   வைஜயந்தமகாமுனி,
பருப்பதசிகரம்  -  (தனியாக)  ஒருபர்வத  சிகரத்தை, சேர்ந்தான் -
அடைந்தான், எ-று. (124)