1264. மஞ்சன வஞ்சன மலையு நான்குள
வெஞ்சிடாத் ததிமுகத் தீரெட்
டாகுமே
வஞ்சிபோ லிரதி கரத்தெண் ணான்குள
மஞ்சிலா தனநல வாமன் கோயிலே.
(இ-ள்.)
மஞ்சன - மேகம்போல்
கருப்பு நிறமுடைய,
அஞ்சன மலையும் - அஞ்சன பர்வதங்களும், நான்கு - நாலு, உள -
உண்டாயிராநின்றன, எஞ்சிடா - குறைவில்லாத, ததிமுகத்து -
ததிமுக
பர்வதங்களில், ஈரெட்டாகும் - பதினாறாகும், வஞ்சிபோல் - கொடி
போலச் சுற்றியிராநின்ற, இரதிகரத்து -
இரதிகரபர்வதங்களில்,
எண்ணான்கு - முப்பத்திரண்டாகும், (இந்தப் பர்வதங்களின்
மேலே),
மஞ்சிலாதன - குற்றமில்லாதனவாகிய, நல - நன்மையாகிய, வாமன் -
ஜினேந்திரனுடைய, கோயில் - ஸ்ரீ சைத்யாலயங்களானவை, உள -
உண்டா யிரா நின்றன, எ-று. (217)
1265. ஆயத மைம்பதிற் றிரட்டி யோசனை
யாயதங் கால்குறைந் தல்ல தோக்கமா
மாயதந் தன்னரை யகல மாயின
வாயின்மூன் றுடையமுன் மண்ட பங்களாம்.
(இ-ள்.)
ஆயதம் - (அந்த
சைத்யாலயங்களின்
சுற்றுமதிலுள்பட) நீளமானது, ஐம்பதிற்றிரட்டி
யோசனை - நூறு
யோஜனைகளாகும், ஓக்கம் -
கோபுரசிகரத்தினோடுங்கூடிய
உன்னதமானது, ஆயதம் - நீளமாகிய நூறு யோஜனையில், கால்
குறைந்து - நாலில் ஒன்று குறைந்து,
அல்லது - மீந்ததாகிய
எழுபத்தைந்து யோஜனை, ஆம் - ஆகும், அகலம் - அகலமானது,
ஆயதந்தன்னரையாயின - நீளத்தில்
பாதியாகிய ஐம்பது
யோஜனைகளாகும், (இப்படி விஸ்திர்ணமாகி
அளவையுடைய
மதிலுக்குள்), வாயில்
மூன்றுடைய -
மூன்று
வாசற்படிகளையுடையதாகிய, முன்மண்டபங்களாம்
- (கிழக்குப்
பார்த்ததாகிய) கந்தகுடி மண்டபங்களையுடைய பிரதம
மண்டபங்கள்
அல்லது பீடிகா மண்டபங்களாகும், எ-று. (218)
1266. மாலையுஞ் சாலங்கள் வாச மார்ந்தவுஞ்
சாலவுந் தாழ்ந்துள வாச லின்புடைப்
பாலிகை முதல்பரிச் சந்தங்க
ணூற்றெட்டு
மாலைவேய்ந் தனபல மலிந்தி ருந்தவே.
(இ-ள்.) வாசலின் - (அந்தக் கந்தகுடி மண்டபங்களின்)
மூன்று
வாசற்படிகளினுடையவும், புடை - இருபக்கங்களிலும், வாசமார்ந்த -
வாஸனைகளால் நிறைந்திரா நின்றனவும், மாலையும் - மாலைகளும்,
சாலவும் - மிகவும், தாழ்ந்து -
|