தொங்கப்பட்டு, சாலங்கள் - சன்னல்கள், உள - உண்டாயிராநின்றன,
(அவையல்லாமலும் அம்மண்டபத்தைச் சூழ்ந்து), பாலிகை முதல் -
பாலிகை முதலாகிய, நூற்றெட்டுப்
பரிச்சந்தங்கள் - நூற்றெட்டு
மங்கலக் கருவிகள், மாலை -
ஒழுங்காக, வேய்ந்தன -
அணியப்பட்டன, பல - இன்னும்
அனேக உபகரணங்களும்,
மலிந்திருந்த - நிறைந்திராநின்றன, எ-று.
‘ஆர்ந்தவும்? என்பதில், உம் - அசை. (219)
1267. ஆலயத் தளவதா யமைந்து கோயின்முன்
பாலிருந் தனபல பல்ல வாதியா
மாடலும் பாடலு மமர்ந்து காண்பவ
ரூடுசென் றனவல வுழைக்க லத்தவே.
(இ-ள்.)
கோயில் - இந்த அக்கிருத்திம சைத்யாலயங்களின்,
முன்பால் - முன்னே கிழக்குப்பக்கத்தில், ஆலயத்து
- கந்தகுடிகள்
இராநின்ற ஆலயத்தினுடைய, அளவதாய் - பிரமாணமாகி,
அமைந்து
- பொருந்தி, பல - பலவாகிய, பல்லவாதியாம்
- அரங்கங்கள்
முதலானவைகளாம், (அவைகளில்), ஆடலும் -
நர்த்தனங்களும்,
பாடலும் - ஸங்கீதங்களும் (இன்னும் அனேக
வாத்தியங்களும்),
அமர்ந்து - பொருந்தி, காண்பவர்
- பார்க்கின்றவர்களும்,
ஊடுசென்றன - இவைகளையெல்லாந்
தன்னுள்ளேயடைந்திரா
நின்றனவாகிய, வல - பலம் பொருந்திய, உழைக்கலத்த -
உழைக்கல
மண்டபங்கள், இருந்தன - இராநின்றன, எ-று.
1268. இஞ்சிக ளம்பொனா லியன்ற கோபுர
முன்சொன வளவினான் முடிந்த
மாதிசை
யஞ்சொலார் முகமென விருந்த
வத்தொடு
வஞ்சிமே கலையென வந்து சூழ்ந்ததே. (இ-ள்.)
இஞ்சிகள் - அக்கோயிலின் சுற்றுமதில்களானவை,
அம் - அழகிய, பொன்னாலியன்று - ஸ்வர்ணத்தினால்
அமைந்து,
முன் - முன்னாலே, சொன்ன - சொல்லப்பட்ட, அளவினால் - அகல
நீள வளவினால், முடிந்த - முடிந்திராநின்றன, மாதிசை - (கிழக்கு
தெற்கு மேற்கு வடக்கு என்னும்) மஹா
திக்குகளில் மத்தியில், கோபுரம் - கோபுரங்களானவை,
அம் - அழகிய, சொலார் -
சொல்லையுடைய ஸ்த்ரீமார்களின், முகமென - முகம்போல (அழகாக),
இருந்த - இராநின்றன, அத்தொடு - அந்த அமைப்போடு, (முன்
சொன்னமதில்களின் வளைவானது), வஞ்சி
- ஸ்த்ரீயினுடைய,
மேகலையென - மேகலாபரணம் போல, வந்து
- சுற்றி வந்து,
சூழ்ந்தது - சூழ்ந்திராநின்றது, எ-று. (221)
|