592மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

 1269. உகப்புடை பெயர்ச்சி யீற்றி னும்முதல் மனித ரோக்கம்
      யுகத்தினுக் கிறைவர் தோற்ற முள்ளிட மலாத தேசம்
      சகத்தது வடிவு தீப சாகரந் தனதி டக்கை
      நகத்தவர் நாகர் மக்கள் விலங்குறை ஞாலங் காட்டும்.

    (இ-ள்.)      உள் -  அந்த  உழைக்கல  மண்டபத்தினுள்ளே,
இடமலாத  தேசம் -  வெற்றிடமில்லாத  பிரதேசமானது,  உகப்புடை
பெயர்ச்சி    -      (உத்ஸர்ப்பிணி         அவஸர்ப்பிணியாகிய)
யுகப்பிரளயங்களுடைய  காலஸ்வரூபத்தையும்,  ஈற்றினும்   முதல் -
உத்ஸர்ப்பிணி  அவஸர்ப்பிணி    காலங்களினுடைய   கடைசியிலும்
முதலிலும், மனிதரோக்கம் - மனுஷ்யர்களுடைய  உன்னதங்களையும்,
யுகத்தினுக்கு   -  அந்தக்  காலங்களுக்கு,  இறைவர்  தோற்றம்  -
ஸ்வாமிகளாகப்பட்டவர்கள்  பிறக்கும்  விதமும்,  சகத்தது  வடிவு -
லோகத்தினுடைய   வடிவங்களையும்,   தீபசாகரந்தன   திடக்கை -
அஸங்கியாத   த்வீப    ஸமுத்திரங்களினுடையவும்   அவைகளிடம்
இருக்கப்பட்டவைகளுடையவும்    ஸ்வரூபங்களையும்,   நகத்தவர் -
விஜயார்த்த பர்வதவாஸி வித்தியாதரர்களுடைய ஸ்வரூபமும், நாகர் -
தேவர்களுடைய ஸ்வரூபமும்,     மக்கள்  -    மனுஷ்யர்களுடைய
விவரங்களும், விலங்கு - திரியக் ஜீவன்களுடைய ஸ்வரூபமும், உறை
- இவைகளெல்லாம்   தங்கும்படியான,   ஞாலம்  -     பூமிகளின்
விவரங்களையும்,    காட்டும்    -    தெரிவிக்கும்,    (அதாவது :
இவைகளெல்லாம் அதில் எழுதப்பெற்றிருக்கும்), எ-று. (222)

வேறு.

 1270. துறக்கத்தும் வீட்டினும் தோன்றி னாரெய்துஞ்
      சிறப்பது விகற்பமுந் தீயநல் வினைகளிற்
      பிறப்பதுங் கதிகளிற் பெயரும் பெற்றியுங்
      குறித்தன புராணத்தாற் கூறு கின்றவே.

     (இ-ள்.)     (இன்னும்    அவ்விடங்கள்),     துறக்கத்தும் -
தேவருலகத்திலும்,  வீட்டினும்  -   மோக்ஷத்திலும்,  தோன்றினார் -
போய்த்தோன்றியவர்,   எய்தும்  -      அடைகின்ற,    சிறப்பது -
பெருமையினுடைய,      விகற்பமும்    -       விகல்பங்களையும்,
தீயநல்வினைகளில்  -  பாபபுண்ணியங்களினால்,       கதிகளில் -
சதுர்கதிகளில்,  பிறப்பதும்  -  பிறக்கின்ற  விதமும்,    பெயரும் -
இப்படிப் பிறக்கும்படியான தன்மையினின்று நீங்கி மோட்சமடைகின்ற,
பெற்றியும்  -  பெருமையும்,  புராணத்தால்  -   ஆகமபுராணத்தால்,
குறித்தன  - எழுதப்பட்டனவாகி,  கூறுகின்ற   - சொல்வதைப்போல
(பார்க்கின்றவர்களுக்குத்) தெரிவிக்காநின்றன, எ-று. (223)