1271. கண்டவர் காட்சியைத் தூப்பஞ் செய்துடன்
பண்டுசெய் தீவினைப் பரப்பைத் தீர்ப்பன
வண்டுறை பிண்டிநல் வாமன் சேவடி
கண்டவர் செயுஞ்சிறப் பைந்துங் காட்டுமே.
(இ-ள்.)
(இன்னும்) கண்டவர்
- அந்த உழைக்கல
மண்டபத்திலெழுதியிருக்கப்பட்ட
இவைகளை
யெல்லாம்
பார்க்கின்றவர்களுக்கு, காட்சியை - தரிசனத்தை, தூப்பஞ்செய்து -
சுத்தஞ்செய்து, உடன் - உடனே,
பண்டுசெய் - பூர்வத்தில்
செய்யப்பட்ட, தீவினைப்பரப்பை -
தீவினைகளின் கூட்டத்தை,
தீர்ப்பன - நீக்கப்பட்டனவாகியும், வண்டு -
வண்டுகள், உறை -
தங்குகின்ற, பிண்டி - அசோக விருட்சத்தின் கீழ் எழுந்தருள்கின்ற,
நல் - நன்மையாகிய, வாமன் - அருகபரமனுடைய, சேவடி -
சிவந்த
திருவடிகளை, கண்டவர் - பார்க்கின்றவர்கள், செயும் - செய்கின்ற,
சிறப்பைந்தும் - பஞ்சகல்யாண பூஜைகளின்
விதிக்கிரமங்களையும்,
காட்டும் - அம்மண்டபம் தெரிவிக்கும், (அதாவது : அம்மண்டபத்தில்
இவையெல்லாம் விளங்க எழுதப்பட்டிருக்கும்), எ-று. (224)
1272. உழைக்கல மண்டப முன்பு தூபையாந்
தழைத்தெழு சேதியத் தருமுன் னின்றது
அழைப்பதி லாடும்வை சயந்தை யாங்கொடி
வழக்கின்மா னத்தம்ப மெய்த
வந்ததே.
(இ-ள்.)
முன்பு - அந்தக் கந்தகுடி மண்டபங்களிராநின்ற
மண்டபத்தின் எதிரிலே (அதாவது : கிழக்கில்), உழைக்கல
மண்டபம்
- இப்போது சொன்ன உழைக்கல மண்டபமாகும், (அதன் கிழக்கில்),
தூபை - ஸ்தூபையானது, ஆம் - ஆகும், முன் - அதன் முன்னே,
தழைத்து - தளிர்களால் நிறைந்து, எழும் - உண்டாகிய,
சேதியத்தரு
- சைத்ய விருட்சமானது, நின்றது - இராநின்றது,
(அதனெதிரில்),
அழைப்பதில் - வரப்பட்டவர்களை
அழைப்பது போல,
வைசயந்தையாம் - வைஜயந்தை யென்கிற, கொடி
- துவஜமானது,
ஆடும் - அசையாநின்றது, வழக்கின்
- இப்போது சொன்ன
வரிசையாகவே, (இவற்றின்
கூட்டம்),
மானத்தம்பம் -
மானஸ்தம்பத்தை, எய்த -
அடையும்படியாக, வந்தது -
வந்திராநின்றது, எ . று. (225)
1273. கோபுரத் தின்புறங் குணக்க தாந்திசை
வாபிமா னந்தையா மாசி லாதநீர்
பூவினா னிறைந்துபொன் மணியி
னாயதோர்
சோபனஞ் சூழ்ந்தவே திகைத்து மாகுமே.
|