594மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

   (இ-ள்.)     கோபுரத்தின்   -      கீழ்த்திசையில்    மதிலின்
கோபுரத்தினுடைய,   புறம்   -   வெளியில்,    குணக்கதாந்திசை -
நேர்கிழக்குத் திக்கில்,  நந்தையாம்  - நந்தையென்று   பெயருடைய,
வாபி  -  தடாகமானது,   மாசிலாத  -   களங்கமில்லாத,    நீர் -
ஜலத்தினாலும்,   பூவினால்   -   புஷ்பங்களினாலும்,   நிறைந்து  -
ஸம்பூர்ணமாகி,   பொன்    -    ஸ்வர்ணத்தினாலும்,   மணியின் -
ரத்தினங்களினாலும்,   ஆயது  -  ஆகியதாகிய,  ஓர்  -  ஒப்பற்ற,
சோபனம்  -  படிகளால்,  சூழ்ந்த  -  சூழ்ந்ததாகிய, வேதிகைத்து -
சுற்றுமதில் மண்டபங்களையுடையதாய்,  ஆகும்  -  அமைந்ததாகும்,
எ-று.

வேறு.

 1274. கந்தகுடி மண்டபங்க ணூற்றெட்டவை காணிற்
      பந்தியொரு மூன்றுநிரை யாகிவைடூ ரியத்
      தம்பமிசை யிருந்ததல மூன்றுடைய தாமு
      மந்தரங்க டம்மிடை யனேகஞ்சிலை யாமே.

    (இ-ள்.)   கந்தகுடி   மண்டபங்கள்  -  (இந்த   அக்கிருத்திம
சைத்யாலயத்துள்  இராநின்ற)  கந்தகுடி  மண்டபங்கள், நூற்றெட்டு -
நூற்றெட்டாகும்,  அவை - அவைகளை, காணில் - பார்க்குமிடத்தில்,
பந்தியொரு மூன்று  நிரையாகி  -  தெற்கு  வடக்காய்  முப்பத்தாறு
முப்பத்தாறாகமூன்று வரிசையாகி, வைடூரியத்  தம்பமிசை  - வைடூரிய
ரத்தினத்தாலாகிய நாலு ஸ்தம்பங்களின்மேலே,  இருந்த - இராநின்ற,
தலமூன்றுடைய - மூன்று  நிலையையுடைய  ஸ்தூபியுஞ்  சிகரமுமாகி
இராநின்றன,  தாமும்  -  அந்தக்  கந்தகுடிகள் தாமும், தம்மிடை -
தங்களுள் ஒன்றுக்கொண்டு  இடையில்,  அந்தரங்கள் -  இடம்விட்ட
வெளிகள், அனேகம் - பலவாகிய, சிலையாம் - வில்லுகளாம்,  எ-று. (227)

  1275. செம்மணிமண் டபத்தினிடைச் சீயவணை மீது
       வம்மலையின் மிசையிருந்த வருக்கனவன் போல
      வெம்மைவினை யுங்கெட விருந்ததிரு வுருவந்
      தம்மளவைஞ் ஞூறுதனு வாகியுயர்ந் தனவே.

     (இ-ள்.)      செம்   -        செவ்விதாகிய,      மணி -
இரத்தினங்களாலாகிய,   மண்டபத்தின்   -    அந்தக்    கந்தகுடி
மண்டபங்களினுடைய,   இடை  -   மத்தியிலே,  சீயவணை  மீது -
ஸிம்மாஸனத்தின்மேல்,   அம்மலையின்மிசை  - அந்தப் பர்வதத்தின்
மேலே, இருந்த  -  இராநின்ற, அருக்கனவன்போல - சூர்யன்போல,
வெம்மை - பொல்லாங்காகிய,  வினையுங்கெட  - வினைகளெல்லாம்
நீங்குபடியாக,  இருந்த  -  இராநின்ற,  திருவுருவம்  தம் - அழகிய
ஜினேந்திர  பிரதிமைகளின்,  அளவு  -  பிரமாணமானது,  ஐஞ்ஞூறு
தனுவாகி  -  ஐந்நூறு  வில்லளவாக,  உயர்ந்தன  -  உன்னதமாகிக்
கிழக்கு முகமாகப் பல்லியங்காஸனமாக இராநின்றன, எ-று. (228)