1276. இருமருங்குஞ் சாமரைக ளியக்கரொடு மியக்க
மருவியமண் டலமும்மலர்ப் பிண்டியுமுக் குடையும்
விரைமலர்கள் சொரிந்தமர ரேத்தவினை நீங்க
பரவுகணம் பன்னிரண்டுஞ் சூழ்ந்திருந்த வாங்கே.
(இ-ள்.)
ஆங்கே - அந்த ஜினேந்திரப்
பிரதிமைகளின்
இடத்தே, இரு மருங்கும் - இரண்டு பக்கத்திலும், சாமரைகள் -
வெண்சாமரைகளை, இயக்கர் - யக்ஷதேவப் பிரதிமைகள், இயக்க -
வீசுவது போல் அமைந்திருக்க, மண்டலமும்
- பிரபாமண்டலமும்,
மலர் - புஷ்பங்களோடு கூடிய, பிண்டியும் - அசோக
விருட்சமும்,
முக்குடையும் - சத்திரத்திரயமும், மருவிய - சேர்ந்திராநின்றன, விரை
- வாசனை பொருந்திய, மலர்கள் - புஷ்பங்களை, சொரிந்து - தூவி,
அமரர் - தேவர்கள் வந்து, ஏத்த - ஸ்தோத்திரம் செய்ய, வினை -
பாவங்கள், நீங்க - கெட, பரவு - ஸ்துதிக்கின்ற, கணம்
பன்னிரண்டு
- த்வாதிர்ம்சதீந்திர கணங்கள், சூழ்ந்திருந்த - சூழ்ந்திருந்தன, எ-று.
வேறு.
1277. ஞாலமோர் மூன்றுடை யானது மைமையின்
மேலெழு காதல் தேவர் விரும்பியுங்
காலம னாதி பரம்பரை யின்கட்
டாலய மக்கண மேவுத லாலும்.
(இ-ள்.)
காலமனாதி - அனாதிகாலமாக, பரம்பரையின்கண்
தேவர் - தேவர்கள் பாரம்பரிய
வரிசையாக, ஞாலமோர்
மூன்றுடையானது - திரிலோக
நாதனாகிய ஜினேந்திரப்
பிரதிமைகளின், மைமையின்மேல் - பூஜிப்பதன்மேல்,
எழும் -
உண்டாகிய, காதல் - பக்தியில், விரும்பியும் - மிகுதியும் இச்சித்தும்,
ஆலயம் - அந்த நந்தீசுவரத்வீபத்திலிராநின்ற
அக்கிருத்திம ஜின
சைத்யாலயங்களில், அக்கணம் -
அந்தந்தக் காலந்தோறும்,
மேவுதலாலும் - அடைகின்ற எண்ணத்தாலும், எ-று. (230)
1278. சோதம னாதி சுரேந்திரர் மைமைகட்
கோதிய பெற்றியின் முற்றுமு ழைக்கலம்
மாதர்க ளேந்திய வாச்சிய கோடணை
யோத வெழுந்துடன் யாவரும் வந்தார்.
(இ-ள்.) மைமைகட்டு - அந்த ஜினபூஜா காரியத்திற்கு, ஓதிய -
சொல்லப்பட்ட, உழைக்கலம் முற்றும் -
யோக்கியமாகிய எல்லா
வஸ்துக்களையும் பெற்றி
|