யின் - பெருமையோடு, ஏந்திய - தரிக்கப்பட்டவர்களாகிய,
மாதர்கள்
- தேவனிதைகளும், சோதமனாதி - ஸௌதர்மேந்திரன் முதலாகிய,
சுரேந்திரர் யாவரும் - தேவேந்திரர்களெல்லாரும்,
வாச்சியகோடணை
- தேவ வாத்தியங்களின் சப்தங்கள், ஓத - மிகவும் சப்திக்க, உடன் -
உடனே, எழுந்து - கிளம்பி, வந்தார் -
அந்த நந்தீசுவரத்வீபத்தில்
வந்தார்கள், எ-று. (231)
1279. சங்கு முரன்றன தாரைகள் பேர்சொல
வெங்கு முழங்கின பேரிய மவ்வொலி
பொங்கிய வாத மடித்துழி
மால்கட
லங்கெழு வோசையை வென்றன
வன்றே.
(இ-ள்.)
சங்கு - சங்கு வாத்யங்கள், முரன்றன - சப்தித்தன,
தாரைகள் - சிறு சின்னங்கள், பேர்சொல - இரைச்சலிட, பேரியம் -
பேரிகைகளும், எங்கும் - எவ்விடங்களிலும், முழங்கின - சப்தித்தன,
அவ்வொலி - அந்தச் சப்தங்கள், பொங்கிய -
பெரிதாகிய, வாதம் -
காற்றானது, அடித்துழி - அடிக்கின்ற காலத்தில், மால் -
பெரிதாகிய,
கடல் - ஸமுத்திரத்தில், அங்கெழு -
அப்பொழுது உண்டாகிற,
ஓசையை - சப்தத்தை, வென்றன - ஜெயித்தன, எ-று. (232)
1280. துகிற்கொடி வெண்குடை தொக்கு நிரைத்தன
மகத்தவர் மங்கலம் பாடவ ரோசை
புகத்திசை விம்ம லொலித்த
மனத்தின்
மிகைத்தெழு மானந்த ராகி யிருந்தார். (இ-ள்.)
இஞ்சிகள் - அக்கோயிலின் சுற்றுமதில்களானவை,
துகிற்கொடி - துவஜக்கொடிகளும், வெண்குடை
- வெள்ளைக்
குடைகளும், தொக்கு - கூடி, நிரைத்தன
- நெருங்கப்பெற்றன,
மகத்தவர் - ஜினேந்திரனுடைய, மங்கலம்
பாடவர் - மங்கல
பாடகர்களுடைய, ஓசை - சப்தமானது, திசை - எத்திக்குகளிலும், புக
- அடையும்படியாக, விம்ம - அதிகரிக்க,
ஒலித்த - சப்தித்தது,
மனத்தின் - மனதில், மிகைத்தெழும்
- மிகுதியாக உண்டாகிய,
ஆனந்தமாகி - சந்தோஷமுடையவர்களாகி,
இருந்தார் -
இராநின்றார்கள், எ-று. (233)
1281. பரந்த வரம்பையர் பாடலோ டாட
னிரந்த வியாழ்குழல் கின்னர
கீதந்
துரங்கமு மாவொடு மானமு மேறி
விரும்பிய வண்ண மணிந்து வியந்தார்.
(இ-ள்.) அரம்பையார்
- தேவரம்பையருடைய, பாடலோடு -
பாட்டுகளுடன், ஆடல் - நர்த்தனங்களும், பரந்த - வியாபித்தன,
யாழ் - வீணைகளும்,
|