குழல் -
புள்ளாங்குழல்களும், கின்னரகீதம்
- கின்னர
தேவர்களுடைய ஸங்கீதங்களும், நிரந்த -
நிரம்பின, துரங்கமும் -
குதிரைகளிலும், மாவொடு - யானைவாஹனங்களிலும்,
மானமும் -
விமானங்களிலும், ஏறி - ஏறிவந்து,
விரும்பிய வண்ணம் - இச்சித்த
வண்ணமாக, அணிந்து - அலங்கரித்துக்கொண்டு,
வியந்தார் -
ஆச்சரியமடைந்து ஸந்தோஷித்தார்கள், எ-று. (234)
1282. விக்கிரி யைப்பல வெட்டு மடுத்தவ
ரக்கிரி யைக்கண் ணழித்தவர்
தம்மொடு
பொக்க முரைத்து நடித்துட னேசிலர்
நக்கனர் தக்கவர் நாணமொ
ழிந்தே.
(இ-ள்.) சிலர்
- சில தேவர்கள்,
விக்கிரியைப் பல -
பலவகையாகும் படியான விகுர்வணைகள்,
எட்டும் - அணிமா
முதலாகிய மூலரித்திகள் எட்டும், அடுத்தவர்
- சேர்ந்தவருடைய,
அக்கிரியைக் கண் - அந்தவிகுர்வணை
கிரியைகளை, அழித்தவர்
தம்மொடு - நீங்கும்படி செய்கின்றவர்களுடன்,
பொக்கமுரைத்து -
அகஸ்யம் பேசியும், நடித்து - நர்த்தனம்
பண்ணியும், உடனே -
இப்படியாகச்
செய்கின்றவர்களுடனே,
தக்கவர் -
தகுதியாயுள்ளவர்களும், நாணம் ஒழிந்து - வெட்கம்
நீங்கி, நக்கனர் -
சிரித்தார்கள், எ-று. (235)
1283. வந்திகள் வந்தனை செய்திறை வன்புக
ழந்தமி லாதன கொண்டடி தாழ்ந்தனர்
கந்திற மோதிய காளப தாகையின்
வந்தனர் தாம்பல ராகிய
வானோர்.
(இ-ள்.) வந்திகள்
- மங்கல பாடகர்கள், வந்தனை செய்து -
வணக்கமாக நமஸ்காரம் செய்து, இறைவன் - ஸ்வாமியினுடைய,
புகழ்
- கீர்த்தியை, அந்த மிலாதன - அளவில்லாதனவாக,
(பக்தியினால்),
கொண்டு - ஸ்துதிகளாகப்பாடிக்கொண்டு,
அடி - (அவருடைய)
பாதகங்களில், தாழ்ந்தனர் -
வணங்கினார்கள், பலராகிய -
அனேகர்களாகிய, வானோர் தாம் - தேவர்கள்,
கந்திறமோதிய
(காற்றினால்) ஸ்தம்பம் அசையும்படியாக
மோதுகின்ற, பதாகையின் -
துவஜங்களையுடையவர்களாகியும்,
காளம் -
காளமென்கிற
வாத்தியத்தோடு கூடினவர்களாயும், வந்தனர் - வந்தார்கள்,
எ-று.
(236)
1284. எழுச்சி முழாவொலி யெங்கு மியம்பப்
பழிச்சி யெழுந்தனர் பண்ணவர்
கோனை
வழக்கினில் வந்துல கந்நடு
மைமைத்
தொழிற்கிறை சோதம னேவலி
னாலே.
|