598மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

   (இ-ள்.)     எழுச்சி  -   இவ்விதமாக   எழுந்து    வருகின்ற
காலத்தில்,  முழாவொலி  -  மத்தளங்களின்  சப்தமானது, எங்கும் -
எவ்விடங்களிலும்,   இயம்ப   -   சப்திக்க,   பண்ணவர்கோனை -
தேவர்கள் நாதனாகிய  ஸ்வாமியை,  பழிச்சி - ஸ்தோத்திரஞ் செய்து,
எழுந்தனர் புறப்பட்டார்கள், வழக்கினில் - பரம்பரை வழக்கத்தினால்,
உலகந்நடு - இந்த மத்திம லோகத்துள்ள  நந்தீசுவரத்வீபத்தில், வந்து
- வந்து சேர்ந்து, மைமைத்  தொழிற்கிறை  - பூஜைத்  தொழிலுக்குத்
தலைவனாகிய, சோதமன் - ஸௌ  தர்மேந்திரனுடைய, ஏவலினால் -
ஆக்கினையினாலே, எ-று. (237)

 1285. கத்திகை பங்குனி யாடிய காசறு
       சுக்கில பக்கநல் லட்டமி தன்னில்
       ஒத்தவோர் பாதியில் வந்துநந் தீச்சரம்
       புக்கவர் மைமை தொடங்கின ரன்றே.

    (இ-ள்.)  கத்திகை  -   கார்த்திகை  மாதத்திலும்,   பங்குனி -
பங்குனிமாதத்திலும்,  ஆடிய - ஆடிமாதத்திலும், காசறு - குற்றமற்ற,
சுக்கிலபக்கம்   -   பூர்வபட்சத்தில்,   ஒத்த  -  பொருந்திய,  நல்
அட்டமிதன்னில் - நல்ல  அஷ்டமிதிதி  முதல் ஓர் - ஒப்பற்றதாகிய,
பாதியில் - அந்த பக்ஷத்தில் உள்ள எட்டு நாளைக்கும், நந்தீச்சரம் -
நந்தீசுவரத்வீபத்தில் வந்து,  புக்கவர் -  அடைந்து  தங்கிறவர்களாகி,
மைமை  -  பூஜையை,  தொடங்கினர்  - செய்வதற்காரம்பித்தார்கள்,
எ-று. (238)

 1286. அக்கண மிக்க வரம்பைய ராடுநர்
       பக்க மெழுந்த வியாழ்குழல் பண்ணொலி
       தொக்கு முரன்ற வலம்புரி துந்துபி
       நக்கன வான முழக்கினை மாதோ.

     (இ-ள்.)     அக்கணம்  -    அப்பூஜாகாலத்தில்,   மிக்க -
மிகுந்த,     அரம்பையர்     -     தேவநர்த்தகிகள்,    ஆடுநர் -
நர்த்தனமாடுபவர்களானார்கள்,  யாழ் - வீணைகளுடையவும், குழல் -
புள்ளாங்குழல்களுடையவும்,  பண்  -  கீதங்களினுடையவும்,  ஒலி -
சப்தமானது,  பக்கம்  -  எப்பக்கங்களிலும்,  எழுந்த - உண்டாயின,
வலம்புரி - வலம்புரிச்சங்குகளும், துந்துபி - மேளங்களும், தொக்கு -
கூடியொலித்து,  வானமுழக்கினை -  மேக  கர்ஜனையை,  நக்கன -
சிரிப்பனவாய், முரன்ற - சப்தித்தன, எ-று. (239)

  1287. சல்லரி தண்ணுமை பேரி முழாவொலி
       யெல்லை தமக்கிலை யென்ன வெழுந்தன