சொல்லினர் தம்மெதிர் சொல்லினர்
தம்மொலி
யொல்லெனு மாக்கட லோசையி னொன்றே.
(இ-ள்.)
சல்லரி - ஜல்லரி வாத்தியமும்,
தண்ணுமை -
ஓர்கட்பறை முதலாகிய வாத்தியங்களும், பேரி - பேரிகைகளும், முழா
- மத்தளங்களும், (ஆகிய இவற்றின்), ஒலி - சப்தங்கள், எல்லை -
எல்லையானது, தமக்கிலை - தமக்கு இல்லை,
என்ன - என்று,
எழுந்தன - வியாபித்தன, சொல்லினர்தம்
- வசனிப்பவர்களுக்கு,
எதிர் சொல்லினர் தம் - மறுமொழி சொல்பவர்களுடைய,
ஒலி -
சப்தங்களும், ஒல்லெனும் - ஒல்லென்றிரைகின்ற, மா - பெரிதாகிய,
கடலோசையின் - ஸமுத்திர இரைச்சலைப்போல, ஒன்று - ஒன்றாகும்,
எ-று. (240)
1288. தும்புரு நாரதர் தொக்குடன்
மிக்கவ
ரெங்கு மியாழிசை யோடொலி தொட்டனர்
தங்கிய கின்னரர் தம்மிது னங்களை
தங்கிய கீதமோ டாயினர் தாமே.
(இ-ள்.)
தும்புரு நாரதர் - தும்புரு நாரதரென்கிற ஒரு
வகையான தேவரிஷியர்கள், யாழிசையோடு மிக்கவர் -
வீணாகானஞ்
செய்வதோடு மிகு வல்லவர்களாய், எங்கும்
- எவ்விடங்களிலும்,
உடன் தொக்கு - உடனே கும்பல் கும்பலாகச்
சேர்ந்து, ஒலி
தொட்டனர் - வீணாவாத்திய வொலியைச் செய்யத் தொடங்கினார்கள்,
தங்கிய - தங்குதல் கொண்ட, கின்னரர்தம்
மிதுனங்கள் தாம் -
கின்னரதேவதம்பதிகள், ஐ தங்கிய -
அழகு சேர்ந்திராநின்ற,
கீதமோடாயினா - கீதங்கள் பாடுதலுடன் செறிந்தார்கள், எ-று. (241)
வேறு.
1289. சக்க ரன்முதற் றேவர்க டாஞ்செய்த
மிக்க செல்வத்தை யாவர் விளம்புவா
ரக்கண முச்சகத் துள்ளவ ராலையந்
தொக்க வேதொடங் கிச்சிறப் போடுமே.
(இ-ள்.) சக்கரன்முதல்
- ஸௌதர்மேந்திரன் முதலாக,
தேவர்கள் தாம் - தேவர்கள், செய்த -
உண்டாக்கிய, மிக்க -
மிகுதியாகிய, செல்வத்தை - ஐஸ்வரியத்தை,
யாவர் - எவர்கள்,
விளம்புவார் - சொல்லுவார்கள், அக்கணம்
- அக்காலத்தில்,
முச்சகத்திலுள்ளவராலையம் - மூன்று லோகத்துள்ள
அக்கிருத்திம
ஜினசைத்யாலயங்களில், தொக்க
- சேர்ந்ததாகி, சிறப்பு -
தேவர்களால் செய்யப்பட்ட பூஜையானது, தொடங்கி
- ஆரம்பித்து,
ஓடும் - செல்லாநிற்கும், எ-று. (242)
|