600மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

வேறு.

 1290. சக்கரன் சமர னீசன் வைரனாந் தேவ ராசர்
      தொக்கவா னவரை நான்கு பாகமாய்த் தொகுத்துக் கொண்டு
      மிக்கவத் திக்கை மேவி விரகுளி சிறப்ப யர்ந்த
      பக்கத்தெண் ணாளுஞ் செய்வர் பதினைநா ழிகையோர் பாலே.

    (இ-ள்.)      சக்கரன் - ஸௌதர்மேந்திரனும், சமரன் - பவண
தேவகுலத்துச்சமரனென்னும்  பெயருடைய அஸுரேந்திரனும், ஈசன் -
ஈசான    கல்பத்திந்திரனும்,    வைரன்   -  வைரோசனனென்னும்
பெயருடையவனாகிய   அஸுரகுலத்திந்திரனும்,   ஆம்  -   ஆகிய,
தேவராசர் - இந்த நாலு தேவராசர்களும், தொக்க - சேர்ந்திராநின்ற,
வானவரை  -  தேவர்களை,  நான்கு  பாகமாய்  -  நாலு  பங்காக,
தொகுத்துக்கொண்டு   -   பிரித்துக்   சேர்த்துக்கொண்டு,    மிக்க
வத்திக்கைமேவி  -  மிகுந்த   அந்த  நந்தீசுவர  த்வீபத்தில்  நாலு
மஹாதிக்குகளிலும்  உள்ள  ஆலயங்களில்    பொருந்தி,   விரகுளி
சிறப்பயர்ந்த  -  கிரமமாகச்  சிறப்புச் செய்த, பக்கத்தெண்ணாளும் -
பூர்வபட்சத்தஷ்டமி முதல் எட்டு நாளும், பதினை நாழிகையோர் பால்
- பதினைந்து நாழிகை வரையில்  ஒரு  பக்கத்தில், (அதாவது : நாலு
பங்குக்காரர்களும்  செய்ய,  அறுபது  நாழிகையாக  இப்படி  எட்டு
நாளும் இடைவிடாமல்), செய்வர் - சிறப்புச் செய்வார்கள், எ-று. (243)

 1291. அக்கணத் தகத்துப் பஞ்ச மந்திரத் தால யத்துட்
      புக்குசா ரணரின் மிக்கா ரிறைவனைப் போற்றி சைப்பர்
      திக்கெட்டி லிறைவன் பாதஞ் செறிந்துல காந்தி தேவர்
      தக்கவச் சிறப்பை யெல்லாந் தாஞ்சிந்தித் திருப்பரன்றே.

     (இ-ள்.)    அக்கணத்தகத்து    -      அந்த     நந்தீசுவர
பூஜாகாலமாகிய கார்த்திகை பங்குனி ஆடிமாஸ  பூர்வபட்ச அஷ்டமி
முதல்  பௌர்ணமிவரையில்,    பஞ்சமந்தரத்து  -  (ஜம்பூத்வீபமேரு
ஒன்றும், தாதகிஷண்டத்திலிரண்டும், புஷ்கராத்தத்தில் இரண்டுமாகிய
இந்த)   ஐந்து    மஹாமேரு  பர்வதங்களிலுள்ள,  ஆலயத்துள்  -
அக்கிருத்திம ஜினசைத்யாலயங்களில்,  சாரணரின் மிக்கார் - மிகுந்த
ஸம்மியக்ஞானதி     குணமுடைய    சாரண    பரமேஷ்டிகளாகிய
யதிவரர்கள்,  புக்கு  -  அடைந்து,  இறைவனை  -  ஜினேந்திரனை,
போற்றிசைப்பர்    -    ஸ்துதிசெய்வார்கள்,      திக்கெட்டில்   -
பிரம்மலோகாந்தியத்தில் எட்டுத்திக்கிலு மிராநின்ற, உலகாந்தி தேவர்
- லௌகாந்தி தேவர்கள்,  இறைவன்  பாதம்  -  ஜினேந்திரனுடைய
பாதங்களை,  செறிந்து   -   மனதில்   சேர்ந்தவர்களாகி,     தக்க
தகுதியாகிய, அச்சிறப்பையெல்லாம்  -  அந்த  நந்தீசுவர பூஜைகளை
யெல்லாம், சிந்தித்திருப்பர் - தியானித்துக் கொண்டிருப்பார்கள், எ-று.

          தாம், அன்றே - அசைகள். (244)