சமவசரணச்சருக்கம்601


Meru Mandirapuranam
  

 1292. நானவிதி முதல்விதிக ளறிந்துமஞ்ச னாங்கத்
      தானமவை யெய்திமஞ்ச னாங்கமவை வாங்கி
      வானவர்கண் மணிக்குடத்து நந்தையெனும் வாவி
      பானந்தனை முகந்துமுகம் பதுமமலர் சூட்டி.

    (இ-ள்.)      நானவிதிமுதல் - ஜினேந்திரப் பிரதிமைகளுக்குச்
செய்யும்படியான   ஸ்நானாபிஷேக   விதிமுதலாகிய,    விதிகள் -
வரிசைக்கிரமங்களை, அறிந்து - தெரிந்து, மஞ்சனாங்கத்தானமவை -
திருமஞ்சனங்கள் இருக்கும்படியான  இடங்களை, எய்தி - அடைந்து,
மஞ்சனாங்கமவை - திருமஞ்சன அங்கமாகிய திரவியங்களை, வாங்கி
- கிரகித்துக்கொண்டு,  வானவர்கள்  -  தேவர்கள், மணிக்குடத்து -
ரத்னங்களாலாகிய  கடங்களில்,  நந்தையெனும்  -  நந்தையென்கிற,
வாலிபானந்தனை - தடாகத்தின்  ஜலத்தை, முகந்து - விதிப்பிரகாரம்
மொண்டு, முகம் - அக்குடத்தின்  முகத்தில்,  பதுமமலர் - தாமரைப்
புஷ்பத்தை, சூட்டி - அணிந்து, எ-று.

           இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (245)

  1293. அஞ்சலியி னோடிறைவ னாலயத்தை வலமாய்
      வந்தவர்க ணின்றிடத்தின் மணிக்கதவந் திறப்ப
      வந்தமினல் லறிவிறைவன் றிருவுருவங் காணார்
      வந்தெழுந்த வானந்தத்தின் மயங்கிமிகத் துதித்தார்.

     (இ-ள்.)    அஞ்சலியினோடு - வணக்கத்துடன்,  இறைவன் -
ஜினேந்திரனுடைய,   ஆலயத்தை   -    கோயிலை,    வலமாய் -
பிரதக்ஷணமாக,    வந்து  -    மூன்று    சுற்றுவந்து,  அவர்கள் -
அத்தேவர்கள், நின்றிடத்தில் - இராநின்ற விடத்தில், மணிக்கதவம் -
அழகிய   கதவுகள்,   திறப்ப  -  திறக்கப்படுதலால்,  (அப்பொழுது
உள்ளேயிராநின்ற),  அந்தமில் - முடிவில்லாத,  நல் - நன்மையாகிய,
அறிவு - கேவல   ஞானத்தையுடைய,   இறைவன்  -  ஜினேந்திரப்
பிரதிமையின்,  திரு  -  அழகிய,  உருவம்   -  ரூபத்தை, காணா -
பார்த்து,  வந்து  -  மனத்தில்  தோன்றி,  எழுந்த  -   உண்டாகிய,
ஆனந்தத்தின்  -  பக்தியினால்,  மிக   மயங்கி  - மிகுதியாகக்கூடி,
துதித்தார் - தோத்திரம் செய்தார்கள், எ-று. (246)

 1294. அனந்தவறி வாலனந்த வீரியனு மானாய்
      அனந்ததெரி சியனந்த வின்பமுடை யோயை
      மனஞ்செயலின் வணங்கினவர் பணிந்துலக மேத்த
      நினைந்தபடி யெய்திவினை நீத்துயர்வ ரன்றே.