(இ-ள்.)
(அவ்வாறு துதித்தவர்கள்),
அனந்தவறிவால் -
அனந்த ஞானத்தினாலே, அனந்த வீரியனுமானாய்
- அனந்த
வீரியத்தை யுடையவனுமானாய், அனந்ததெரிசி - அனந்ததர்சனத்தை
யுடையவனும், அனந்தவின்பமுடையோயை - அனந்தஸௌக்கியத்தை
யுடையவனுமாகிய உன்னை, மனம்செயலின் - மனோவாக்காயங்கள்
பொருந்த, பணிந்து -
நமஸ்கரித்து, வணங்கினவர் -
வணங்குகின்றவர்கள், நினைந்தபடி - நினைத்த பிரகாரம், எய்தி -
அடைந்து, வினைநீத்து - கர்மங்களைக்
கெடுத்து, உலகம் -
இவ்வுலகத்துள்ள பவ்வியர்கள், ஏத்த -
ஸ்துதிக்க, உயர்வர் -
மேலானபதவியைப் பெறுவார்கள், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும்
குளகம். (247)
1295. என்றுநின்று துதித்திறைவ னாலயத்தி னுள்ளா
லன்றுசென்று புக்கமர ராசரவர் தாங்கள்
வென்றவர்த மிறைவன்றிரு வுருவதனுக் கேற்ப
நின்றவர்கள் செய்தசிறப் பெவர்க்குநினைப் பரிதே.
(இ-ள்.)
என்று நின்று துதித்து - என்று
சொல்லி நின்று
துதிசெய்து, அமரர் -
தேவர்களும், அரசரவர் தாங்கள் -
தேவேந்திரர்களும், இறைவன் - சர்வஜ்ஞனுடைய,
ஆலயத்தினுள்ளால்
- ஆலயத்துள், அன்று - அப்பொழுது, சென்றுபுக்கு -
போய்
உள்ளேயடைந்து, வென்றவர்தம்
- ஸகல கர்மங்களையும்
ஜெயித்தவராகிய, இறைவன் - ஜினேந்திரனுடைய, திரு - அழகிய,
உருவதனுக்கு - ரூபமாகிய பிரதிமைகளுக்கு, ஏற்ப - இசையும்படி,
நின்று - நிலைபெற்று, அவர்கள் - அத்தேவர்கள், செய்த - இயற்றிய,
சிறப்பு - பூஜையானது, எவர்க்கும் - யாவர்களுக்கும், நினைப்பு -
எண்ணுவதற்கு, அரிது - அருமையாகும், எ-று. (248)
வேறு.
1296. தோள்க ளாயிரத் தழுத்தினர்
மணிக்குடம் சோதமன் முதலானோர்
வீழும் மேருவின் னருவியின்
வீழ்த்தனர்
வென்றவர் தம்மேனி
யூழி யூழிதோ றாயதீ
வினையவை
தீர்ந்தமூ வுலகத்தோர்
தாழு மப்பெயர்த் தாண்டக
மாயிர
முகத்துடன் படித்தாரே. (இ-ள்.)
சோதமன் முதலானோர் - ஸௌதர்மேந்திரன்
முதலாகிய தேவர்கள், தோள்களாயிரத்து - ஆயிரம்
புயங்களை
நிருமித்துக்கொண்டு அவற்றால்,
|