சமவசரணச்சருக்கம்603


Meru Mandirapuranam
  

மணிக்குடம் - ரத்தினத்தினாலாகிய பூர்ண கடங்களை, அழுத்தினர் -
தரித்தவர்களாய்,   வென்றவர்தம்மேனி  -  கருமங்களை   ஜெயித்த
ஜினேந்திரப்   பிரதிமைகளின்  மேல்,  மேருவின்  -   மஹம்மேரு
பர்வதத்தினின்றும்,   வீழும்   -     சொரிகின்ற,    அருவியின் -
அருவிஜலம்போல,  வீழ்த்தனர்  -  சொரிந்தார்கள், ஆயிரமுகத்து -
(பிறகு)  ஆயிரம்    முகங்களை  நிருமித்துக்கொண்டு   அவற்றால்,
மூவுலகத்தோர்    தாழும்    -   மூன்று      லோகத்தார்களாலும்
வணங்கும்படியாகிய,   அப்பெயர்   -  அந்த   ஜினேந்திர   குண
ஹைஸ்ராஷ்ட நாமங்களாகிய, தாண்டகம் - தண்டகஸ்துதியை, உடன்
- அபிஷேகவிதி  முடிந்தவுடன், படித்தார் - சொல்லித் துதித்தார்கள்,
ஊழிஊழி  தோறாய -  ஒவ்வொரு   ஊழ்க்காலத்திலு  முண்டாகிய,
தீவினையவை - கெட்டவினைகளெல்லாம், தீர்ந்த - நீங்கின, எ-று. (249)

 1297. கண்க ளாயிர முடையவச்
             சக்கரன் காதியைக் கடிந்தோர்தம்
      பண்பெ லாமுட னிருந்தவப்
            படிமத்தைப் பலமுறை பார்த்தாரா
      வண்கை யாற்றொழு திறைவன்றன்
            சரணத்தை வாழ்த்தொடு மருச்சித்தான்
      பெண்க ளிற்பிறப் பில்லவிந்
            திராணியிப் பெருஞ்சிறப் புடன்செய்தாள்.

    (இ-ள்.)   கண்களாயிரமுடைய -  ஆயிரம்  கண்களையுடைய,
அச்சக்கரன்   -    அந்தத்    தேவேந்திரனானவன்,   காதியை  -
காதிகருமங்களை,       கடிந்தோர்தம்    -      ஜெயித்தவராகிய
ஜினேந்திரருடைய, பண்பெலாம் - குணமெல்லாம், உடனிருந்த - ஒரு
தன்மையைப்போல்   சேர்ந்திராநின்ற,  அப்படிமத்தை  -   அந்தப்
பிரதிமாரூபங்களை,  பலமுறை  - பலதடவையும், பார்த்து - நோக்கி,
ஆரா - ஆர்ந்து, (அதாவது : பொருந்தி), இறைவன்தன் சரணத்தை -
ஜிநப்பிரதிமைகளின்    பாதத்தை,     வண்கையால்    தொழுது -
ஈகைபொருந்திய  கையால்  வணங்கி,  வாழ்த்தொடும் - ஸ்துதியுடன்,
அருச்சித்தான்    -  அர்ச்சனையும்     செய்தான்,   பெண்களில் -
தேவஸ்த்ரீகளில், பிறப்பில்ல - இனி அதிகப் பிறப்பில்லாமல் அடுத்த
ஒரு  பவத்தில்  கர்மக்ஷயம்செய்து  மோட்சமடையும்  பக்குவமுள்ள,
இந்திராணி  -  இந்திராணியானவள்,   இப்பெருஞ்சிறப்பு  -   இந்த
நந்தீசுவர பூஜையை, உடன் -   தேவேந்திரனுடன்கூட,  செய்தாள் -
செய்து முடித்தாள், எ-று. (250)

 1298. கந்த முங்கடி மாலையுஞ் சுண்ணமுங் காரகி லிடுதூப
      நந்தை யின்னல வாரியுந் தீபமு நலபல சருவாலு
      மந்த மில்லநல் லுவகையின் னடம்பல தொடங்கிநின்
                                      றருச்சித்தார்
      சந்தி ராதிகீழ் முத்தேவ ருமிந்திரர் சோதமன் முதலானோர்.