604மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

கீழ்முத்தேவரும்   - (பவண,  வியந்தர,    ஜோதிஷ்கரென்கிற) கீழ்
முத்தேவர்களும்,   சந்திராதி  -  சந்திராதித்யர் முதலாகிய,இந்திரர் -
கீழ்முத்தேவேந்திரர்களும்,        சோதமன்        முதலானோர் -
ஸௌதர்மேந்திரன் முதலாகிய கல்பாமர இந்திரர்களும், அந்தமில்ல -
அளவில்லாததாகிய,        நல்லுவகையின்    -     நன்மையாகிய
ஸந்தோஷத்தினால், நடம்பலதொடங்கிநின்று - பலவிதமாக  ஆனந்த
நர்த்தனங்களைச் செய்து நின்று, கந்தமும் - சந்தனக்குழம்பு  முதலிய
ஸுகந்த வஸ்துக்களாலும்,  கடி  -   வாசனை  தங்கிய, மாலையும் -
பூமாலைகளாலும்,  சுண்ணமும்  -  வாசனைத்   திரவிய    கதம்பத்
தூள்களாலும்,  கார்  -  கருமை  பொருந்திய,  அகிலிடும் - அகில்
கட்டையின்   தூள்   முதலியவற்றால்   போடப்பட்ட,     தூபம் -
தூபங்களாலும், நந்தையின் -  நந்தையென்கிற   தடாகத்திலுண்டான,
நல் - நன்மையான, வாரியும் - ஜலத்தினாலும், தீபமும் - தீபத்தாலும்,
நல - நன்மையாகிய, பல -  அநேக  விதங்களாகிய,   சருவாலும் -
அப்பவர்க்கங்களாதியாலும், அருச்சித்தார் - அர்ச்சனை செய்தார்கள்,
எ-று. (251)

 1299. மற்ற விந்திரர் தம்மொடும்
             படிந்திரர் மைமைகண் மும்மைக்கண்
      ணுற்று நற்சிறப் புழைக்கலந்
             தாங்கினர் தேவியர் தம்மோடும்
      பெற்றி யாற்பிறப் பறுக்குநற்
             சிறப்பினைச் செய்துசக் கரன்பினைக்
      குற்ற மில்லநல் லறிவுடை
             யிறைவன்றன் குணத்துதி சொலலுற்றான்.

    (இ-ள்.)   மற்ற   -    மீந்த,      இந்திரர்    தம்மொடும் -
இந்திரர்களோடு, படிந்திரர் -  பிரதீந்திரர்களும், மைமைகண் - பூஜா
காரியத்தில்,   மும்மைக்கண்   -    மனவசன    காயங்களென்னும்
மூன்றினாலும்,   உற்று   - பொருந்தி, நல் - நன்மையாகிய,  சிறப்பு.
அந்த பூஜைக்கு  யோக்கியமாகிய,  உழைக்கலம்  -  பொருள்களை,
தேவியர் தம்மோடும் - தங்கடங்கள் தேவி மார்களுடன், தாங்கினர் -
தரித்தார்கள், சக்கரன் -  ஸௌதர்  மேந்திரனானவன், பெற்றியால் -
பெருமையினாலே,       பிறப்பறுக்கும்      -     ஸம்ஸாரத்தைக்
கெடுக்கும்படியான, நல் - நன்மையாகிய, சிறப்பினை - இந்த நந்தீசுர
பூஜையை,  செய்து  -  செய்து,  பின்னை  -  பிறகு,   குற்றமில்ல -
தோஷநிவாரணமாகிய,  நல்  -  நன்மையாகிய, அறிவுடை - கேவல
ஞானத்தையுடைய, இறைவன் தன் - ஜினேந்திரனுடைய, குணத்துதி -
குணத்தின் ஸ்துதிகளை, சொல்லுற்றான் -  சொல்லத் தொடங்கினான்,
எ-று. (252)