1300. அருக னீநல்ல பூசைக் கருகனாய்ப்
பெரியை யாயினை பெண்ணசை
யின்மையா
லொருவ னாயினை யொப்பவ ரின்மையாற்
றுருவ மாயினை தோற்றம தின்மையால்.
(இ-ள்.)
நல்ல -
நன்மையாகிய, பூசைக்கு
-
பவ்வியர்களினால் செய்கின்ற பூஜைக்கு,
நீ - நீ, அருகனாய் -
உரியவனாகி, (அதனால்),
அருகன் - அருகன்
என்கிற பெயருடையவனானாய்,
பெண்ணசையின்மையால் -
ஸ்த்ரீவாஞ்சையில்லாததினால், பெரியையாயினை - பெரியோனானாய்,
ஒப்பவரின்மையால்
உனக்கொப்பானவர்களில்லாமையால்,
ஒருவனாயினை - உபமாதீதனாகினாய், தோற்றமதின்மையால் -
பிறப்பில்லாததனால், துருவமாயினை
- நிச்சயமான
நித்தியஸ்வரூபியானாய், எ-று. (253)
1301. எரியும் போல்வைநீ யெண்வினைக் காளித
முருகச் சுட்டுயிர் தூப்பத்தைச்
செய்தலால்
தருவு நீழவும் போல்வைநீ சார்ந்தவர்
பெரிய துன்பப் பிறப்பினை நீத்தலால்.
(இ-ள்.)
நீயறியா - நீ அறியாத, பொருள் -
திரவியம்
(அல்லது) வஸ்துக்கள், இன்மையால் - இல்லாததினால், அறிவன் -
ஸர்வஜ்ஞனாகினாய், முற்றவுணர்ச்சியால் - ஸகல
பொருள்களையும்
ஏகசமயத்தில் அறிவதால்,
முறையு நீ
யிலை -
கிரமகரண
வியவதானமென்பதை
நீயில்லாதவனாயினாய்,
காய்வதொன்றின்மையால் - கோபத்தன்மை
சிறிதுமில்லாததினால்,
கறுவு நீ யிலை - துவேஷமென்பதை 1302. அறிவ னீயறி யாப்பொரு ளின்மையால்
முறையு நீயிலை முற்ற வுணர்ச்சியாற்
கறுவு நீயிலை காய்வதொன் றின்மையால்
இறைவ னீயுல கியாவு மிறைஞ்சலால்.
(இ-ள்.) நீயறியா - நீ அறியாத, பொருள் - திரவியம்
(அல்லது) வஸ்துக்கள், இன்மையால் - இல்லாததினால், அறிவன் -
ஸர்வஜ்ஞனாகினாய், முற்றவுணர்ச்சியால் - ஸகல பொருள்களையும்
ஏகசமயத்தில் அறிவதால், முறையு நீ யிலை - கிரமகரண
வியவதானமென்பதை நீ யில்லாதவனாயினாய்,
காய்வதொன்றின்மையால் - கோபத்தன்மை சிறிதுமில்லாததினால்,
கறுவு நீ யிலை - துவேஷமென்பதை
|