நீ யில்லாதவனாயினாய், உலகுயாவும்
- உலகத்துள்ள பவ்வியப்
பிராணிகளெல்லாம், இறைஞ்சலால் - உனை வணங்குகின்றபடியால்,
இறைவனீ - திரிலோகத்துக்கும் நாதன் நீயேயாகின்றாய், எ-று. (255)
1303. முழுது நீமுழு துக்கு மிறைவனீ
முழுது தன்வடி வின்முழு தாகிநீ
முழுதுங் கண்டுணர்ந் தாயின்ப முற்றுநீ
முழுதும் விரித்து நான்முக னாகிநீ.
(இ-ள்.)
முழுதும்நீ - லோகாலோக
ஸமஸ்தமும்
காண்கின்ற அனந்த தரிசனத்தால் நிஜருசிலக்ஷண
முழுதையும்
அடைந்தவனீயே, முழுதுக்கும் - லோக முழுதுக்கும், இறைவனீ -
நாதனானவனும் நீயே, முழுது தன்
வடிவின் - உனது முழு ரூபத்தினால், முழுதாகி - ஸர்வவியாபியாகி,
(அனந்த ஞானத்தினால்)
நீமுழுதுங் கண்டுணர்ந்தாய் - ஜீவாதி
சகல பதார்த்தங்களையும்
பிரத்தியக்ஷமாய்ப் பார்த்து அறிந்தாய் நீ, இன்பமுற்றுநீ -
ஸம்பூர்ண
ஸௌக்கியமான அனந்த ஸுகமுள்ளவனும்
நீ, முழுதும் விரித்து -
ஜீவாதி சகல பதார்த்தங்களையெல்லாம் திவ்யத்வனியால்
விசாலமாக
விரித்துச் சதுர்வேதங்களாகும்படி சொல்லியருளி,
நான்முகனாகிநீ -
சதுர்முகத்தை யுடையவனும் நீயே, எ-று. (256)
1304. உண்மை தானின்மை யுண்மை யின்மையாந்
திண்ணிய தன்னோ டவாச்சியஞ் செப்பிடிற்
பண்ணு பங்கங்க ளேழ்பொருட் கில்லையே
லுண்மை தான்பொருட் கில்லையென் றோதினாய்.
(இ-ள்.)
உண்மைதான் - ஸ்யாதஸ்தியும், இன்மை -
ஸ்யாநாஸ்தியும், உண்மையின்மை - ஸ்யாதஸ்திநாஸ்தியும்,
ஆம் -
ஆகிய, திண்ணிய - சேர்ந்திரா நின்ற,
தன்னோடு - இந்த
மூன்றோடு, அவாச்சியம் - ஸ்யாதவக்
தவ்யமும், (எனநாலாக),
செப்பிடில் - சொல்லுமிடத்தில், பண்ணு - சேர்க்கின்ற (அதாவது :
முன் பண்பாகிய மூன்றுகளுடன் நாலாவதாகிய
அவக்தவ்யத்தைத்
தனித்தனியாகச் சேர்க்க,
ஸ்யாதஸ்தி
அவக்தவ்யம்,
ஸ்யாநாஸ்தியவக்தவ்வியம், ஸ்யாதஸ்தி நாஸ்தியவக்தவ்வியமுமென்று
கணக்கிடுகின்ற), பங்கங்களேழ் - இந்த ஸப்தபங்கி
நியாயமானது,
பொருட்கு - ஜீவாதி பொருள்களுக்கு , இல்லையேல்
- இல்லாமல்
போகுமானால், பொருட்டு -
ஜீவாதி பதார்த்தங்களுக்கு,
உண்மைதானில்லையென்று - நிச்சயமில்லை
யென்று, ஓதினாய் -
சொல்லினாய், எ-று. (257)
1305. சுற்ற நீயெவர்க் குந்துன்ப நீக்கலாற்
பற்று நீயிலை பற்றவை தீர்த்தலான
|