சமவசரணச்சருக்கம்607


Meru Mandirapuranam
  

     முற்று நீயுணர்ந் தாய்மூ வுலகத்தின்
     பெற்ற தன்னைநீ யாவர்க்கும் பேசலால்.

    (இ-ள்.)      எவர்க்கும்  -  உனையடைந்த  யாவர்களுக்கும்,
துன்பம் - துக்கங்களை,  நீக்கலால் - நீங்கச்  செய்வதால்,  சுற்ற  நீ
ஸகல  பவ்வியபந்துவும்  நீயே,  பற்றவை  -  மோஹத்தினாலாகின்ற
ராகத்வேஷாதி    பற்றுக்களை,     தீர்த்தலால்   -     நீக்குகின்ற
பிரகாரத்தினால்,    பற்று  நீ யிலை    -   நீராகாதி     பற்றின்றி
வீதராகனாகின்றாய்,    மூவுலகத்தின்  பெற்றி  தன்னை  -   மூன்று
லோகத்தினுடைய ஸ்வரூபங்களை  , யாவர்க்கும்  - கணதராதி ஸகல
பவ்விய ஜீவர்களுக்கும், நீ பேசலால் -  நீ  உபதேசஞ்செய்வதினால்,
முற்றும் - கைலத்தையும், உணர்ந்தாய் நீ - அறிந்தவனும் நீயே, எ-று. (258)

  1306. அருவ னீயக திக்க ணிருத்தலால்
       உருவ னீயுடம் போடுசென் னாளெலாம்
       மருவி வானவர் வாழ்த்தியிவ் வாற்றினாற்
       பொருவி லாப்புண்ணி யத்தொடும் போயினார்.

     (இ-ள்.)    அகதிக்கண்  -    இனியாதொன்றிலு   மடைந்து
பிறத்தலில்லாத மோட்டசத்தில், இருத்தலால்  -  இருக்கின்றபடியால்,
அருவன்நீ - அரூபியானவனும் நீயே, உடம்போடு செல்நாளெலாம் -
மோட்சமடைவதன் முன் சரீரத்தோடு கூடிச்சென்ற காலத்திலெல்லாம்,
உருவன்நீ     -   ரூபத்தையுடைத்தானவனும்    நீயே,    (என்று),
இவ்வாற்றினால்  -    இந்தப்     பிரகாரத்தினால்,     வானவர் -
சதுர்ணிகாயாமரர்களும்,      மருவி    -      நந்தீசுவரத்வீபத்தில்
அக்கிருத்திமசைத்யாலயப் பிரதிமைகளின் எதிரிலடைந்து, வாழ்த்தி -
ஸ்தோத்திரங்களைச்   செய்து,     பொருவிலா  -  உபமையில்லாத,
புண்ணியத்தொடும் - புண்ணியத்தோடும் கூடினவர்களாகி, போயினார்
- தங்கள் தங்களிடமடைந்தார்கள், எ-று. (259)

வேறு.

 1307. இமையவர் போலவிச் சிறப்பைச் செய்தவ
      ரிமையவ ருலகத்தை யெய்தி யிங்குவந்
      திமையவர் செயுஞ்சிறப் பைந்து மெய்திப்போ
      யிமையவர் தொழச்சித்தி யகத்தி ருப்பரே.

(இ-ள்.) இமையவர்போல - தேவர்களைப்போல, இச்சிறப்பை - இந்த
நந்தீசுவர  பூஜையை,  செய்தவர்  -  செய்த   அருகத் பக்திபாவனா
பலமுள்ள  பவித்திர  மனுஷ்யர்கள்,  இமையவருலகத்தை  யெய்தி -
அடுத்த  பிறப்பில்     தேவருலகடைந்து    தேவர்களாகிப் பிறந்து
உத்கிருஷ்ட சுபோபயோகதத் பரர்களாகிப் பிறகு,