(இ-ள்.) இறைவ ஸ்வாமியே!, வினை
மன்னர் - கர்மமாகிற ராஜாக்கள், மிகுதற்கு - ஆத்மனிடத்தில் வந்து மிகுந்து பந்திப்பதற்கு,
ஏது - காரணமானது, என்கொல் என்று - என்ன காரணம் என்று, அங்கு - அப்பொழுது, அறை
- சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அரசர் - இராஜாக்கள், கேட்டார்
- வினவினார்கள், அருந்தவர் - மேருமந்தர கணதரர்கள், உரைக்கலுற்று - சொல்லத் தொடங்கி,
எட்டும் - ஞானாவரணாதியஷ்ட கர்மங்களும், நெறியினால் - கிரமத்தினால், தத்தம்
- தங்கள் தங்களின், நிமித்தத்தை - காரணமாகிய அசுத்த சேதனா பரிணாமத்தை, நிறையப்பெற்று
- நிறைதலாகப் பெற்று, செறிய - ஆத்மனிடத்தில் சேர்ந்ததனாலே, மிக்கு - அதிகாஸ்ரவமாகியும்,
அல்லது - அல்லாமல், ஈனம் - ஹீனாஸ்ரவமாகியும், ஆம் பந்தமாகும், அது - அந்தக்கர்மாஸ்ரவ
காரணமான பரிணாமத்தை, செப்ப - சொல்ல, கேண்மின் - கேளுங்கள், எ-று. (282)
1330. பரமனூல் பழித்தல் மாய்த்த லிடையுறல் பிழைக்க வோதல்
குரவர்மா றாதல் சுருதங் கொண்டுழி கரத்தற்
றீநூன்
மருவுதல் துவர்க ணான்கின் ஞானமாச் சரிய
முற்றும்
பெருகிலா வரண ஞானக் காட்சியைப் பிணிக்கு
மிக்கே.
(இ-ள்.) பரமன் - அஷ்டாதசதோஷரஹிதனான ஜினேந்திரனெனும்
அரஹந்த பரமதேவனது (அதாவது : அவனால் சொல்லப்பட்ட), நூல் - (திவ்விய பாஷாவாக்
பிரவர்த்தியாகி கணதரரசித த்வாதசாங்காதி) பரமாகமங்களை, பழித்தல் - நிந்திப்பதும்,
மாய்த்தல் - நாசஞ் செய்தலும், இடையுறல் - விக்கினம் பண்ணுவதும், பிழைக்கவோதல்
- அதன் கருத்துக்களை மாறுபாடாகச் சொல்லுவதும், குரவர் மாறாதல் - ஆசாரிய உபாத்தியாயாதி
சுருதகுருக்களை மாறுபாடாகத் தூஷிப்பதும், சுருதங்கொண்டுழி - ஆகமத்தை வைத்துக்கொண்டிருந்த
விடத்தும், கரத்தல் - வஞ்சனை செய்து பவ்வியோபகாரமாகச் செய்யாமல் மறைத்து விடுவதும்,
தீ நூல் மருவுதல் - மித்தியாவாகிய சாஸ்திரங்களைச் சேர்வதும், துவர்கள் நான்கில்
- குரோத மான மாயா லோபங் ளென்னும் நான்கில், ஞானம் - சம்மியக் ஞானத்தின் மேல்,
மாச்சரியம் - பகையாவதும், (ஆகிய) முற்றும் - இவையாவும், பெருகில் - விருத்தியாகுமேயானால்,
(அதனாலே), ஆவரண ஞானக்காட்சியை - ஞானாவரணீய தர்சனாவரணீய மென்கிற கருமங்களை,
மிக்கு - மிகுதியாக பிணிக்கும் - ஆஸ்ரவமாகி ஆத்மனிடத்தில் பந்திக்கும். எ-று.
(283)
1331. தன்முத லுயிரைக் கோறல் வருத்துதல் படைக ளேந்தி
யின்னுயிர் நடுங்கச் சேற லெரியிட லுறுப்ப
றுத்தல்
வின்முத லீத லுள்ளம் வருந்தவெந் துயரைச்
செய்தல்
இன்னவை யிடரை யீனு மசாதவே தத்தை யீட்டும்.
|