142மேருமந்தர புராணம்  


 

களை,  வலிதின் - வலிய  பிரயத்தனத்தால் அல்லது மாறுபாட்டினால்,
வாங்கி   -  கிரகித்து,  இந்நிலவரைப்பின் -  இப்பூமியில், என்றும் -
எப்பொழுதும்,   நின்றிடும்    -   நிலைபெறும்படியான,   பழியும் -
பழிச்சொல்லையும்,     எய்தி    -    அடைந்து,     மின்னினும் -
மின்னலைப்பார்க்கிலும்,  கடிது  -  சீக்கிரமாக,  வீயும்  - நாசமாகும்,
யாக்கையும் - இச்சரீரத்தையும்,  கிளையும் - பந்துக்களையும்,  ஓம்பல்
- இரக்ஷிக்கின்றது,  மன்னவ - அரசனே!, மக்களிப் பிறவிக்கு - இந்த
மனிதராகிய பிறப்புக்கு, பெரியதொன்றோ - பெரிதான தொன்றாகுமோ
(ஆகாது), என்றான் - என்று சொன்னான், எ-று.

 308. தானத்திற் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால
     வீனத்து ளுய்க்கு நிற்கு மெச்சத்தை யிழக்கப் பண்ணு
     மானத்தை யழிக்குந் துய்க்கில் மற்றவர்க் கடிமை யாக்கு
     மூனத்து நரகத் துய்க்கும் பிறன்பொரு ளுவக்கின் வேந்தே.

     (இ-ள்.)   (பின்னும்)  வேந்தே  -  அரசனே, பிறன்பொருள் -
அன்னியனது   பொருளை,     உவக்கின்    -     சந்தோஷித்துக்
கைக்கொண்டால்,  (அது)  தானத்திற்கு -  சற்பாத்திரங்களில் தானஞ்
செய்வதற்கு,  உரித்துமன்று  - உரியதுமல்ல,  தன் - தனது, கிளைக்கு
- பந்துக்களுக்கு,  ஈயில் - கொடுத்தால், சால - மிகவும், ஈனத்துள் -
இழிவான   நிலையில்,   உய்க்கும்    -    செலுத்தும்,    நிற்கும் -
நிலைத்திருக்கும்,   எச்சத்தை   -   சந்ததியை,  இழக்கப்பண்ணும் -
இழக்கும்படி   செய்யும்,   மானத்தை  -  பெருமையை, அழிக்கும் -
அழித்துவிடும்,    துய்க்கில்    -    அனுபவித்தால்,    அவர்க்கு -
அப்பொருட்காரர்க்கு,          அடிமையாக்கும்         (அவ்வாறு
அனுபவித்தவர்களை)   ஏவலர்களாகவும்   செய்விக்கும்,  ஊனத்து -
குற்றம் பொருந்திய,  நரகத்து  -  நரகத்திலும்,  உய்க்கும் - செலுத்தி
விடும், எ-று.

     மற்று - அசை.                                     (85)

 309. பேறிழ வின்ப துன்பம் பிணிபகை பிறப்பி வற்றின்
     ஆறுதான் முன்பு செய்த வினைவழி வருவ தல்லால்
     வேறொன்றா லாவ துண்டோ வினையென்பா னின்ற தொன்றால்
     மாறின்றாய் நின்ற தல்லான் மற்றிவன் செய்த துண்டோ.

     (இ-ள்.)  பிறப்பு  -  இந்த  ஜன்மத்திலே, பேறு  -  அடையும்
இலாபமும்,  இழவு  -  நஷ்டமும்,   இன்பதுன்பம் - சுகதுக்கங்களும்,
பிணி  -  வியாதியும், பகை  -  சத்துருத்வமும், (ஆகிய) இவற்றின் -
இவைகளின்,  ஆறுதான்  -  வழியானது,  முன்புசெய்த - பூர்வத்தில்
செய்த,    வினைவழி    -    கர்மானுரீதியாய்,     வருவதல்லால் -
உதயமாவதேயல்லாமல்,  வேறொன்றால்  -  வேறொரு  தன்மையால்,
ஆவதுண்டோ - ஆவதுளதோ, வினை - பூர்வவினையானது, என்பால்
- என்னிடத்தே,   நின்றதொன்றால்,    உதயமானபிரகாரம்,   மாறு -
(இம்மந்திரிக்கும் எனக்கும் ஏற்பட்ட)