பறந்து வந்துநின் றிருவடி பரவுவ
திதுவுன்
சிறந்த தன்மையோ திருவறத் தியற்கையோ வருளே.
(இ-ள்.) இறந்த
- கெட்ட, காதிகள் நான்மையும் - நான்கு காதி
கருமங்களும், அழிந்த - கெட்டு நீங்கின,அக்கணத்து -
அப்பொழுது,
நான்மையும் - அனந்த சதுஷ்டயமும், நிறைந்த - நிறைந்தன,
உடனே
- அங்ஙனம் நிறைந்தவுடனே, வானவர் - தேவர்கள்,
நிலைதளரா -
(தங்கள் ஆசனங்கள்) சலித்தல் செய்ய, பறந்து
வந்து -
சீக்கிரமாகவந்து, பரவுவது - நின்னை ஸ்துதிப்பதாகிய,
இது -
இந்தத்தன்மை, உன் - உன்னுடைய, சிறந்த - மேலான,
தன்மையோ -
ஸ்வபாவமோ?, திருவறத்து - ஸ்ரீ : ஜிநதருமத்தினது,
இயற்கையோ -
ஸ்வபாவமோ?, அருள் - அருள்செய்து கூறுவாயாக, எ-று.
‘இயற்கையோசெப்பே? என்றும் பாடம்.
(129)
130. குற்றமொன்றிலை யெனிற்குற்ற மூன்றுநீ யுரைத்தாய்
பற்று நீயிலை யென்னிலு லோகமுன் பற்றாஞ்
சுற்ற நீயிலா யென்னிலெவ் வுயிருமுன் சுற்ற
மற்ற நீயில்லாய் முனிவர்கோ னாயதோர் மாயம்.
(இ-ள்.) (பெரியோர் நினக்குக்
குற்றமில்லை யென்கிறார்கள்;
அங்ஙனம்) குற்றமொன்று - யாதொரு குற்றமும்,
இலையெனில் -
உனக்கில்லை யென்றால், குற்றமூன்று -
முக்குற்றத்தை, நீ--,
உரைத்தாய் - சொன்னாய், (உனக்குப் பற்றிலை
யென்கிறார்கள்.
அங்ஙனம்) நீ--, பற்றிலையென்னில் - எதையும்
பற்றிலையானால்,
உலோகம் - மூன்று லோகமும், உன் - உனது,
பற்று ஆம் -
ஞானமாகிய பற்றில் சிக்கியனவாம்,
(உனக்குச் சுற்றமில்லை
யென்கிறார்கள்; அங்ஙனம்) நீ--, சுற்றம் -
யாதொரு சுற்றமும்,
இலாயென்னில்
- இல்லாதவனென்றால், எவ்வுயிரும் - ஸகல
ஜீவன்களும், உன் - உனது, சுற்றம் -
சுற்றமாகும்,
(இப்படியிருப்பதனாலே) அற்றம் - யாதொரு சோர்வும், இல்லாய்
-
இல்லாதவனாகிய, நீ-, முனிவர் - (முக்குற்றம், பற்று,
சுற்றம்
ஆகியவற்றைவிட்ட) முனிவர்களின், கோனாயது -
இறைவனாகியது,
ஓர் - ஒப்பற்ற, மாயம் - ஆச்சரியமாகும், எ-று.
(130)
131. அறிவு நீயிலை யொன்றல
தெமக்கவை யநேகம்
பிறவி நீயிலை யாங்களோ பிறவியிற் பெரியோம்
செறிவ தோர்கதி யுனக்கிலை யெமக்குநான் கிவற்றால்
வறியை நீயெம்மை யாட்கொண்ட வசியிது பெரிதே.
(இ-ள்.) நீ - உனக்கு,
அறிவு - ஞானம், ஒன்றலது - (கேவலக்
ஞானமாகிய) ஒன்றேயல்லாமல், இலை - மற்றவிகற்ப
ஞானங்கள்
இல்லை, எமக்கு -
|