யாத, உதயத்தாலே -
உதையத்தினால், மாநிரவாயு - பெரிய
துன்பத்தைச் செய்யும்படியான நாகாயுஷ்ய கர்மமானது, மருவும்
-
ஆத்மனிடத்தில் பந்திக்கும், எ-று. (288)
1336. வஞ்சனை மனத்து வைத்து வாக்கொடு காயம் வேறாய்
நஞ்சென வொழுக்கம் பற்றி நல்லொழுக் கழித்த
லாலு
மெஞ்சிடா மூட மாதி மூன்றுமிச் சுதயத் தாலுஞ்
செஞ்செவ்வெவ் விலங்கி லுய்க்கு மாயுகஞ்
செறிக்கு மிக்கே.
(இ-ள்.) வஞ்சனை - கபடத்தை,
மனத்து - மனதில், வைத்து -
வைத்துக் கொண்டு, வாக்கொடு - வசனத்தோடு, காயம் - சரீரமும்,
வேறாய் - வேறாகி, நஞ்சென! - விஷம்போன்று பொல்லாங்காகிய,
ஒழுக்கம் - ஹிம்ஸாதிதுச்சாரித்திரத்தை,
பற்றி - பொருந்தி,
நல்லொழுக்கு - அஹிம்ஸாதிசத் சாரித்திரத்தை, அழித்தலாலும்
-
கெடுப்பதினாலும், எஞ்சிடா - குறைவில்லாத, மூடமூன்று - (லோக
தேவ பாஷண்டமாகிய) திரிமூடங்கள், ஆதி - முதலாகிய, மிச்சு
-
மித்தி யாத்துவகர்மத்தினுடைய, உதயத்தாலும் - உதயவசத்தினாலும்,
செஞ்செவ்வெவ் விலங்கில் -
ஸஜ்ஞி அஸஜ்ஞிகளாகிய
திரியக்கதிகளிலே, உய்க்கும் - செலுத்தும்
படியான, ஆயுகம் -
திரியக்காயுஷ்யகர்மமானது, மிக்கு - மிகுதியாக,
செறிக்கும் -
பந்திக்கும், எ-று. (289)
1337. மெய்ம்மையாந் தெளிவி லாகும் வென்றவர் குணத்து ளார்வஞ்
செம்மைவான் கருணை மெய்ம்மை சிந்தையுட்
கலக்க மின்மை
யிம்மையாம் போகம் வேண்டா முனிவர்கட்
கீத லாதி
தம்மினாம் போக பூமி மக்களா யுகங்க டாமே.
(இ-ள்.) மெய்ம்மையாம்
தெளிவில் - உண்மை ஸ்வரூபத்தை
யறியும்படியான ஸம்மியக்தரிசன சுத்தியினாலே, ஆகும் - ஆகின்ற,
வென்றவர் - காதி அகாதி கர்மங்களை ஜெயித்தவர்களாகிய அரஹந்த
ஸித்த பரமேஷ்டிகளின் மேலும், குணத்துள் - நிச்சய
வியவஹார
ரத்தினத்திரய குணங்களின் மேலும், (ஆகின்ற) ஆர்வம் - பக்தியும்,
செம்மை - நடுவுநிலைமையும், வான் கருணை - ஹேயோபாதேய
விஜ்ஞான தயவும், மெய்ம்மை - ஸம்மியக்த்துவதிரடமும், சிந்தையுள் -
மனதுள், கலக்கமின்மை - கலங்காத தர்மத்தியான சுக்லத்தியானாதி
ஸத்பாவனையும், இம்மை - இஹஜன்மத்து, ஆம் - ஆகின்ற, போகம்
- இந்திரிய விஷய போகங்களை, வேண்டா
- இச்சிக்காது
வைராக்யபாவனாதத்பரர்களாகிய, முனிவர்கட்கு - முனிவரர் முதலாகிய
கணங்களுக்கு, ஈதல் - ஆஹார ஒளஷத
ஆவாஸ சாஸ்திராதி
தானங்களைக் கொடுப்பதும், ஆதிதம்மின் - முதலாகிய தான பூஜாதப
சீலபரிணாமாதிகள், ஆம் - ஆகின்ற, போக பூமி மக்களாயுகங்களாம்
- போக பூமி மனுஷ்யாயுஷ்ய
கர்மங்களை பந்திக்குங்
காரணங்களாகும், எ-று. (290)
|