1338. உரைத்தவிக் குணங்கள் மாய மொன்றிடி லந்தப் பூமி
திரிக்கய வாயு வாகுஞ் செப்பிய குணங்கள்
மாயம்
பொருத்தமில் லாத போது மந்தமத் திமங்க
ளாகில்
வருத்தமில் கரும பூமி மக்களா யுகங்க ளாமே.
(இ-ள்.) உரைத்த
- சொல்லப்பட்ட, இக்குணங்கள் - இந்த
தர்சன விசுத்தியாதி ஸம்மியக்துவ ஸத்குணங்கள்,
மாயம்
மாயாச்சாரத்தை, ஒன்றிடில் - பொருந்தினால், அந்தப் பூமி - அந்த
போகபூமியில், திரிக்கய வாயுவாகும் - திரியக்காயுஷ்ய காரணமாகும்,
செப்பிய - சொல்லப்பட்ட, குணங்கள்
- இந்த ஸத்குண
பாவனைகளில், மாயம் பொருத்தமில்லாதபோது - மாயாச்சார மில்லாத
காலத்தில், மந்தம்மத்திமங்களாகில் - பரிணாமங்கள்
உத்கிருஷ்ட
மில்லாமல் மிருது தர மத்தியதரமாகில், வருத்தமில் - ஸுஹகரமாகிய,
கரும பூமிமக்களாயுகங்கள் - கர்ம பூமி மனுஷ்யாயுஷ்ய கர்மங்கள்,
ஆம் பந்தமாகும், எ-று. (291)
1339. அறத்தெழு விருப்பி னாலு மான்றநற் காட்சி யாலும்
வெறுத்தெழு மனத்தி னாலும் மிக்கநற் பொறையி னாலுஞ்
சிறப்புடைச் சமத்தி னாலும் தேவர சாக்கும்
பூமி
பிறப்பினைச் சமைக்கு மக்க ளாயுகம் பிணிக்கு
மிக்கே.
(இ-ள்.) அறத்தெழும்
- தர்மத்தியானத்தில் உண்டாகிய,
விருப்பினாலும் - பிரீதியினாலும், ஆன்ற
- மேன்மையாகிய,
நற்காட்சியாலும் -
ஸம்மியக் தரிசனத்தினாலும்,
வெறுத்தெழுமனத்தினாலும் - ஸம்ஸார விஷய சுகதுக்கங்களில் விராக
பாவனை செய்யும் மனத்தாலும், மிக்க நற்பொறையினாலும் - மிகுந்த
நல்ல க்ஷமையினாலும், சிறப்புடை - மேம்பாடுடைய, சமத்தினாலும் -
சமத்வீபாவத்தினாலும், தேவரசாக்கும் -
தேவர்களுக்கெல்லாம்
நாதனாகும்படியான, தன்மையை உண்டாக்கும்,
பூமி -
தர்மக்ஷேத்திரத்தில், பிறப்பினை - பிறக்கும்படியான
(அதாவது :
ஸ்வாமித்துவம் ஆகும்படியான) சரமதேஹப்பிறப்பை, சமைக்கும் -
உண்டாக்கும் படியான, மக்களாயுகம்
- திவ்விய
மனுஷ்யாயுஷ்யமானது, மிக்கு - உத்கிருஷ்டமாக,
பிணிக்கும் -
பந்திக்கும், எ-று. (292)
1340. நெறியிவைப் பெறாதா ரந்த நிலத்துள விலங்கு மாவார்
அறிவொன்று முதல்வி லங்குந் தெளிவிலா மனித
ராகு
மறுவிலாந் தெளிவி னாலே வாயுதே யுக்கள்
சென்று
செறியுமைம் பொறிவி லங்கில் சிறியதோர்
கருணை யாலும்.
(இ-ள்.) நெறியிவை
- இந்த நெறிகளை, பெறாதார் -
அடையாதவர்கள், சிறியதோர் கருணையாலும் - அற்பகுண தயவினால்,
அந்த நிலத்துள விலங்கு
|