மாவார் - அந்த கர்ம
பூமியில் திரியக் காயுஷ்யபந்த
காரணமாவார்கள், அறிவொன்று முதல் விலங்கும் - ஏகேந்திரிய
முதலாகச் சதுரிந்திரியம் வரையிலுள்ள
விலங்குகள்,
மறுவிலாந்தெளிவினாலே - மோஹபகுளத்தினாலாகிய
சேதனா
வாஸனையினால், தெளிவிலா மனிதராகும் - நீசமனுஷ்யாயுஷ்ய
கர்மமும் பந்திக்கும், வாயுதேயுக்கள் - அந்த ஏகேந்திரியத்திலும்
வாதகாயிகதேஜஸ் காயிகஜீவன்கள், (தங்கள் மோஹபகுளத்தினால்),
செறியுமைம்பொறி விலங்கில் - நீசமனுஷ்யாயுஷ்யங் கூட கட்டாமல்
ஏதோ ஒருக்கால் பஞ்சேந்திரிய அஸஜ்ஞி விலங்காயுஷ்ய கர்மத்தில்,
ஆகும் - பந்திக்கும், எ-று.
உம்மைகள் -
அசைப்பொருளன. ‘ஆகும்" என்பது
இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (293)
1341. விரதமில் காட்சி தீமை விரவிய வொழுக்க மார்வ
மருவிய சரிதங் குத்தி சமிதைபன் னிரண்டு
சிந்தை
தருமமுந் தவமுந் தேவ ராயுகந் தன்னை யாக்கும்
விரதசீ லங்கள் மிச்சம் விரவின தாலு மாமே.
(இ-ள்.) விரதமில்
காட்சி - அஸம்மியத ஸம்மியக்த்துவமும்,
தீமை விரவிய வொழுக்கம் - ஹோயோபாதேய விஜ்ஞானமில்லாத
அஜ்ஞான சாரித்திரமும், ஆர்வமருவிய சரிதம் - இந்திரிய
விஷய
பாக வாஞ்சையை விரும்பிய காமியார்த்தியாக பூஜாதபவிரதாதிகளாகிய
சரியையும், குத்தி - திரிகுப்தியும், சமிதை
- பஞ்சசமிதிகளும்,
பன்னிரண்டு சிந்தை - த்வாதசானுப்பிரேக்ஷா பாவனையும், தருமமும் -
தசதர்மதத்பரத்துவமும், தவமும் - பாகியாப்பியந்தர பேத தபோனுப்
பிரயோகமும், தேவராயுகந்தன்னை ஆக்கும் -
உத்தம மத்திம
ஜகன்னிய பேதமாகிய தேவாயுஷ்ய கர்மத்தை உண்டாக்கும், மிச்சம்
விரவினது - ஸம்மியக்துவ ரஹித மித்தியாத்துவ ஸஹிதமாகியதான,
விரத சீலங்களாலும் - விரத சீலாச்சாராதிகள் ஆகியவைகளாலும்
(அதாவது : இப்பரிணாமங்களின் தீவ்ர மந்ததரத்தின் தரதமமாகவும்),
ஆம் - இது பந்திக்குங் காரணமாகும், எ-று. (294)
1342. நற்குணம் பொறாமை தீய கதைகளை நவிற்ற னலல
சொற்களை யுறழ்தல் தூய வொழுக்கின்மை துயர மெய்தல்
குற்றத்தால் மனோவாக் காயங் கோட்டம்
பொல் லாச்சி ரிப்பும்
மற்றிவை பழித்தல் நாமம் பிணித்தலுக்
கேதுவாமே.
(இ-ள்.) நற்குணம் - ஸம்மியக்த்துவாதி
குணங்களை, பொறாமை
- ஸஹிக்கமுடியாமையும், தீயகதைகளை -
பொல்லாங்காகிய
சரித்திரங்களை, நவிற்றல் -
சொல்வதும், நல்லசொற்களை -
தர்மவசனங்களை, உறழ்தல் - நீக்கி விடுவதும், தூயவொழுக்கின்மை -
ஸத்சாரித்திர மில்லாது
துச்சாரித்திர பிர
|