வர்த்தியும், துயரமெய்தல் -
துக்கமடைதலும், குற்றத்தால் -
ராகத்துவேஷாதிகளால், மனோவாக்காயங்கோட்டம் - மனவசனகாய
மாறுபாடும், பொல்லாச்சிரிப்பும் - பொல்லாங்கை உண்டுபண்ணும்
ஹாஸ்யமும், (ஆகிய), இவை - இவைமுதலாகிய பரிணாமாதிகள்,
பழித்தல் நாமம் - அசுபநாமகர்மம், பிணித்தலுக்கு - பந்திப்பதற்கு,
ஏதுவாம் - காரணமாகும், எ-று.
மற்று - அசை. (295)
வேறு.
1343. தூய காட்சியுஞ் சுருக்கமில் வினயமு மிறப்பிலா வதஞ்சீல
மாய நல்லுப யோகமும் வேக மாற்றிய தவந்
தியாகஞ்
சாய றிந்துசெய் சமாதிவை யாவச்ச மாவச்சந் தாழ்வின்மை
மாய மின்னெறி விளக்கலுந் துளக்கின்றி
யறத்துவச் சளத்தாழும்.
(இ-ள்.) தூயகாட்சியும்
- தர்சனவிசுத்தியும், சுருக்கமில் -
குறைவில்லாத, வினயமும் - சதுர்வித
விநயமும், இறப்பிலா -
அதிசாரமில்லாத, வதம் சீலம் - சீலவிரதேஷு அனதீசாரமும், ஆய -
ஆகிய, நல் - நன்மையாகிய,
உபயோகமும் - ஆபீக்ஷண
ஞானோபயோகமும், வேகம் - ஸம்வேகமும், ஆற்றியதவந்தியாகம் -
சக்தித தபஸும் சக்தித தியாகமும், சாயறிந்து - ஸன்மார்க்கமறிந்து,
செய் - செய்கின்ற, சமாதி - ஸாது ஸாமாதியும்,
வையாவச்சம் -
வையாப்பிரத்திய கரணமும், ஆவச்சம் - ஆவசியகா பரிஹாணியில்,
தாழ்வின்மை - தளராது செய்கின்ற
தன்மையும், மாயமில் -
மாயாச்சாரமில்லாத, நெறிவிளக்கலும் -
மார்க்கப்பிரபாவனமும்,
துளக்கின்றி - சலனமில்லாமல், அறத்துவச்சளத்தாழும் - பிரவசன
வத்ஸலத்துவமும், எ-று.
(296)
1344. அறிவ னாகம மாசரி யன்பல சுருதிவ லாரன்புஞ்
செறிய நின்றிடுந் தீர்த்தக ரத்துவஞ் செய்யுநற்
றிருநாமம்
மறுவி லிக்குண நல்லநற் குணத்தினில் வையகத் துயிர்தம்மைக்
குறுகு நாமங்க ணல்லவை சாலவுங் குணநல்ல வைகளாலே.
(இ-ள்.) அறிவன்
ஆகமம் ஆசரியன் பலசுருதிவலாரன்பும் -
அருகத் பக்தியும் பிரவசனபக்தியும் ஆசாரியபக்தியும் பகுசுருதபக்தியும்
(ஆகிய இந்த ஷோடசபாவனா பரிணாம
பூர்த்தியானது),
தீர்த்தகரத்துவம் - தீர்த்தகரநாம மஹா
புண்ணியகர்மம்,
செறியநின்றிடும் - பந்திக்கின்றதற்குக்
காரணமாகி நிற்கும்,
(அதுவல்லாமலும்), நல் - நன்மையாகிய, திரு - அழகிய,
நாமம் -
சுபநாமப் பிரகிருதிகள், மறுவில் -
குற்றமில்லாத, இக்குணம் -
இப்போது சொன்ன குணமாகிய, நல்ல
- நன்மையாகிய,
நற்குணத்தினில் -
சுபகுணத்தினாலும், வையகத்து - |