626மேருமந்தர புராணம்  


 

இவ்வுலகத்தில், உயிர்தம்மை - ஜீவன்களை,  குண நல்லவைகளாலே -
சற்குண  பாவனையாலே,  சாலவும்  - மிகவும், நல்லவை நாமங்கள் -
சுபநாமகர்மங்கள், குறுகும் - ஆத்மனிடத்தில் அடையும், எ-று.  (297)

வேறு.

 1345. பிறர்களைப் பழித்துத் தன்னைப் புகழ்ந்துடன் பிறர்க ணின்ற
      மறுவிலாக் குணத்தை மாய்த்துத் தீக்குணம் பரப்பி மாறாய்
      நிறைவிலா நீச மாய வொழுக்கத்தைப் புகழ்ந்து நல்லோர்
      நிறையுலா வொழுக்கங் காய்ந்தார் நீ கோத் திரம தாகும்.

     (இ-ள்.)   பிறர்களை   - அன்னியர்களை, பழித்து - நிந்தித்து,
தன்னை  -   தன்னை, புகழ்ந்து - புகழ்ச்சிசெய்து,  உடன் - உடனே,
பிறர் கண்ணின்ற - அயலார்களிடத்துள்ள, மறுவிலா - களங்கமில்லாத,
குணத்தை   -   ஸத்குணத்தை,   மாய்த்து  - கெடுத்து, தீக்குணம் -
பொல்லாங்காகிய   குணத்தை,   பரப்பி - விசாலமாக உண்டுபண்ணி,
மாறாய்   -    மாறுபாடாய்,   நிறைவிலா  -   நன்மையில்லாத, நீச
மாயவொழுக்கத்தை   -    கெட்ட நடத்தையை,  புகழ்ந்து - துதித்து
விரும்பி, நல்லோர் - பெரியோர்களையும்,  நிறையுலா - நிறைவுபெற்று
வியாபித்த,   நல்லொழுக்கம்   -  ஸத்சாரித்திரத்தையும், காய்ந்தார் -
கோபித்தவர்களுக்கு, நீசகோத்திரமது - நீசகோத்திர கர்மமானது, ஆம்
- பந்திக்குங் காரணமாகும், எ-று.                          (298)

 1346. அறைந்தவிக் குணத்தின் மாறா யறிவனை யுள்ளிட் டாரை
      யிறைஞ்சிநின் றொழுகல் தன்னை யிழித்தல்பார்த் துண்ட னல்ல
      வறம்புகழ்ந் திடுத றன்னைப் பொககஞ்செய் யாமை தம்மாற்
      பிறந்துல கிறைஞ்ச நிற்குங் கோத்திரஞ் செறியு மென்றான்.

     (இ-ள்.)   அறைந்த  -  சொல்லப்பட்ட, இக்குணத்தின் - இந்த
துர்க்குணங்களினின்றும்,   மாறாய்  - வேறாகி, அறிவனை - அனந்த
ஞானஸ்வரூபனான  அரஹந்த ஸித்த பரமாத்மனையும், உள்ளிட்டாரை
- அவர்களைத்    தியானிக்கின்ற    ஆசாரியராதி     மூவகையான
அந்தராத்மர்   களையும்,   (அதாவது :  பஞ்ச  பரமேஷ்டிகளையும்),
இறைஞ்சிநின்று   -   வணங்கிநின்று,    ஒழுகல்    -   நடப்பதும்,
தன்னையிழித்தல்  -  தன்னை  நிந்தித்தலும்,  பார்த்துண்டல் - மஹா
முனிவராதியார்  பிக்ஷாடனமாகவரும்  வேளையைப்பார்த்து அக்காலம்
கடந்து   தான்  பொசிப்பதும்,  நல்லவறம் - அஹிம்ஸாதியாகிய தயா
தருமத்தை,     புகழ்ந்திடுதல்    -    விரும்புவதும்,       தன்னை
பொக்கஞ்செய்யாமை    தம்மால்    -    தன்னை   அலங்கரித்துப்
பொலிவுபண்ணாமையும்   ஆகிய   இப்பரிணாமங்களினால், பிறந்து -
லோகத்திற்றோன்றி,    உலகு - இவ்வுலகிலுள்ளயாவரும், இறைஞ்ச -
வணங்கும்படியாக,     நிற்கும்     -          நிலைபெற்றிராநின்ற,