சமவசரணச்சருக்கம்627


 

கோத்திரம்  -  உச்சைர் கோத்திர கர்மமானது, செறியும் - பந்திக்கும்
காரணமாகும், என்றான் - என்று சொல்லினான், எ-று.         (299)

 1347. கொலையைக்கோ பித்துச் செய்யாக் கொடையினை யிடைவி
                                                    லக்கா
      விலையெனி னுவந்து நன்றென் றீந்துழிக் காய்ந்து நெஞ்சிற்
      புலைசுதேன் கள்ளு மேவிப் பிறன்செல்வம் பொறாது வவ்வ
      வலைசெய்ய வந்த ராய மைந்தும்வந் தடையு மென்றான்.

    (இ-ள்.)  (ஆத்மன்)  கோபித்து - ரௌத்திரத்தியான தத்பரனாய்,
கொலையை   -    ஹிம்ஸாத்யுபத்திரவங்களை,  செய்யா - செய்தும்,
கொடையினை  -  அன்னியர்களால்   கொடுக்கின்ற தானம் முதலான
வியவஹார   நிச்சயங்களை,  இடை - மத்தியில், விலக்கா - தடுத்தும்,
இலையெனின்   -   (அப்படிப்பட்ட  வியவஹார நிச்சயங்களில் தான்
தடுத்து விக்கினம்  செய்யும் பாஷ்யத்தைக் கேட்டுக்கொண்டு ஒருவன்
அசத்தியங்களில்   தலையிட்டு)    இல்லையென்பானாகில், உவந்து -
ஸந்தோஷித்தும்,    ஈந்துழி   -   (வியவஹாராதியின்படி   ஒருவன்)
கொடுக்குமிடத்து,   நெஞ்சில் - மனதினால்,   காய்ந்து - கோபித்தும்,
புலைசு   -    மாம்சங்களையும்,    தேன்  -  மதுவையும், கள்ளு -
கள்ளுமுதலானவைகளையும்,    மேவி   -    பொருந்தியும், பிறன் -
அன்னியனுடைய,    செல்வம்    -     ஐஸ்வரியத்தை,  பொறாது -
ஸஹிக்காமல்,    வவ்வ    -    அபகரிக்கவும்,     அலைசெய்ய -
துன்பஞ்செய்யவும்,      (இவை    யாதியாகிய    பரிணாமங்களால்),
அந்தராயமைந்தும் - ஐந்துவிதமாகிய அந்தராய கர்மங்களும், வந்து -
அந்த    ஆத்மனிடத்தில் வந்து, அடையும் - பந்திக்கும், என்றான் -
என்றும் சொல்லினான், எ-று.                             (300)

 1348. சொன்னகா ரணங்கள் பாவ யோகத்தின் படியிற் சொல்லி
      னுன்னலாம் படிய வல்ல வுரைக்கினுஞ் சொற்க ளாற்றா
      வென்னமுந் நாற்க ணத்துள் யாவரு மிறைஞ்சி யேத்தித்
      துன்னிய வினையை வெல்லத் தொடங்கினார் பலரு மன்றே.

     (இ-ள்.)  சொன்ன - சொல்லப்பட்ட, பாவகாரணங்கள் - இந்தச்
சேதனா பரிணாமங்கள்,  யோகத்தின்படியில் - மனவசன காயத்தினால்
ஆத்ம   பிரதேச  பரிஸ்பந்தங்கள் முதலியவைகளினால், சொல்லின் -
சொல்லுமிடத்தில்,   உன்னலாம்    படியவல்ல    -     நினைக்கும்
தன்மையுடையனவல்ல,     உரைக்கினும்    -     சொல்லப்புகினும்,
சொற்களாற்றா - சொற்கள்  பற்றாவாம்,  என்ன - என்று மேருமந்தர
கணதரர்கள்   சொல்ல,   முந்நாற்கணத்துள் - த்வாதசகணங்களிலிரா
நின்ற,   யாவரும்   -  எவர்களும்,   இறைஞ்சி - வணங்கி, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி, பலரும் - அனேகமான பேர்களும், துன்னிய -
சேர்ந்திராநின்ற,   வினையை   -   கர்மங்களை, வெல்ல - ஜெயிக்க,
தொடங்கினார் - ஆரம்பித்தார்கள், எ-று.                    (301)