|  
      							     விம்மினார் சம்முச்சங் கருப்பத் தாவதாந் 
	        தம்மிலுஞ் சராயுக மண்டம் போதமாம். 
      							     (இ-ள்.)     நம்மினுண்ணியவர்   -  நமக்குள்  நுண்ணியராகிய 
      							  பஞ்சேந்திரிய   லப்திய பரியாப்தக மனுஷ்யரும், நாலறிவு காறுளார் - 
      							  ஏகேந்திரிய   த்வீந்திரிய    த்ரீந்திரிய   சதுரிந்திரிய ஜீவன்கள்வரை 
      							  உள்ளவரும்,  சம்முச்சப்பிறவியர் - ஸம்மூர்ச்சனாப் பிறப்புடையராவர், 
      							  விலங்கில்   - திரியக்     ஜீவன்களில்,   ஐம்பொறி   விம்மினார் - 
      							  பஞ்சேந்திரியங்களில்  பிறப்பவர்கள், சம்முச்சம் - சில சம்மூர்ச்சனாப் 
      							  பிறப்பிலும்,    கருப்பத்து - சில     கர்ப்பங்களிலும்,   ஆவதாம் - 
      							  ஆக்கப்பட்டதாகும்,    தம்மிலும் - அந்ததிரியக்கதி  கர்ப்பங்களிலும், 
      							  சராயுகம் - ஜராயுபடலத்தோடு    கூடிப்      பிறப்பதும், அண்டம் - 
      							  முட்டைகளில் பிறப்பதும், போதம் - குட்டிகளாகப் பிறப்பதும், ஆம் - 
      							  ஆகும், எ-று. 
      							     இவைகளின்   விஸ்தாரங்களை   ஸுகபோதை என்னும் நூலில் 
      							  இரண்டாவது அத்தியாயத்தில் பார்த்துக்கொள்ளவும்.			             (304) 
      							1352.	யாவையுந் தோற்செவி யுடைய சன்னியாந் 
      							       தாவருந் துளைச்செவி சன்னிய சன்னியாம் 
      							       மேவருந் திருவறம் மேவுஞ் சன்னிக 
      							       ளோவிலாப் பிறப்பிவற் றியோனி யொன்பதாம். 
      							     (இ-ள்.)     ஓவிலா    -    இடைவிடாமல்  பிறக்கும்படியான, 
      							  பிறப்பிவற்றின்   - இந்தப்     பிறப்புகளின்,    யோனி - ஜீவன்கள் 
      							  பிறக்கும்படியான     யோனிஸ்தானங்கள்,      ஒன்பதாம் - ஒன்பது 
      							  பிரகாரமாகும்,    யாவையும் - இந்த    ஜீவன்களில்     யாவையும், 
      							  தோற்செவியுடைய    -    தோல்காதுடையவைகள்,    சன்னியாம் - 
      							  ஸஜ்ஞிஜீவன்கள்   ஆகும்,    தாவரும் - நீக்குவதற்கு    அரிதாகிய, 
      							  துளைச்செவி   - துளைக்காதுடைய ஜீவன்கள், சன்னிய சன்னியாம் - 
      							  சில    ஸஜ்ஞிகளும்     சில    அஸஜ்ஞிகளிலுமாகும், சன்னிகள் - 
      							  ஸஜ்ஞிஜீவன்கள்,    மேவரும்  - பெறுதற்கரிதாகிய,     திருவறம் - 
      							  ஸ்ரீஜினதர்மத்தை,  மேவும் - பொருந்தும், (சில பொருந்தாமையுமாகும்), 
      							  எ-று. 
      							     யோனிபேதங்களின்  விவரங்களை ஸுகபோதையில் இரண்டாவ 
      							  ததிகாரத்தில் பார்த்துக்கொள்ளவும்.					                            (305) 
      							1353.	வினையுயிர் தத்தமில் விடுதல் வீடது 
      							        தனகுண நீங்கலுந் தவியஞ் சூனியம் 
      							        முனையவ ருடனுறல் முதல்வ னன்றுதா 
          னனகனாய்க் குணங்களு மனந்த மாகுமே.  |