களும் ஸௌக்கியத்தை யடையும்படியான, உரைக்கணின்று -
தர்மோபதேச வசனத்திற்பொருந்தி, உத்தமப்பொறையோடு - உத்தம
க்ஷமையென்கிற தர்மத்துடன்கூடி, ஓம்பினார் - அத்தருமத்தை
நழுவாமல் உபசரித்துப் போற்றினார்கள், எ-று. (311)
1359. மார்த்தவத் தால்வளைந் தாரு யிர்க்கெலாம்
பார்த்தறம் பகர்ந்துளம் பஞ்சின் மெல்லிய
ரார்ச்சவத் தகம்புறம் மணிவி ளக்கிதொத்
தூர்த்தமா யொருவகை யொழுகு நீரரே.
(இ-ள்.) மார்த்தவத்தால் - உத்தம மார்த்தவ குணத்தால்
(அதாவது : கர்வ ரஹித குணத்தினால்), வளைந்து - வணக்கத்தோடு
கூடியவர்களாகி, ஆர் - நிறைந்திராநின்ற, உயிர்க்கெலாம் -
ஜீவர்களையெல்லாம், பார்த்து - ஸமத்வீபாவமாக நோக்கி,
அறம்பகர்ந்து - பவ்விய ஜீவன்களுக்கு தர்மோபதேசஞ்செய்து, உளம்
- மனமானது, பஞ்சின் - பஞ்சைப்பார்க்கிலும், மெல்லியர் -
மிருதுவானகுணத்தையுடையவர்களாகி, ஆர்ச்சவத்து - உத்தம
ஆர்ஜவமென்னும் தர்ம குணத்தினால், அகம் புறம் - உள்ளும்
புறமும், மணிவிளக்க தொத்து - ரத்தின தீபத்துக்குச் சமானமாகி,
ஊர்த்தமாய் - மேலான ரிஜுபரிணாமமாகி, ஒருவகை - ஒப்பற்ற
விதமாக, ஒழுகும் - நடக்கின்ற, நீரர் - குணமுடையவரானார்கள்,
எ-று. (312)
1360. ஆர்வமுஞ் செற்றமு மயக்க மின்மையா
லாருயிர்க் குறுதியல் லாத சொல்லிலா
ரோர்விடத் தொருவிய புலத்தின் மீட்டுளஞ்
சோர்விடத் துஞ்செலாத் தூய ராயினார்.
(இ-ள்.) ஆர்வமும் - (இஷ்ட வஸ்துகளென்று சிலவற்றில்)
ராகமும், செற்றமும் - (அனிஷ்ட வஸ்துக்களென்று சிலவற்றில்)
துவேஷமும், மயக்கம் - மோகமும், இன்மையால் -
இவர்கட்கில்லாமலாகிய ஸம்மியக்துவ குணவிருத்தியினால், ஆர் -
நிறைந்திராநின்ற, உயிர்க்கு - பவ்விய ஜீவன்களுக்கு, உறுதியல்லாத -
உறுதியை உண்டுபண்ணுதலில்லாத, சொல்லிலார் - வசனத்தைச்
சொல்லாதவர்களாய் உத்தம சத்திய தர்மத்தையுடையவர்களாய்த்
தர்மோபதேசமொழியே சொல்லா நின்றார்கள், ஓர்விடத்து - யாதொரு
பிரகாரத்தாலும், ஒருவிய - ஆகாதென்று நீக்கிவிடப்பட்டிருக்கிற,
புலத்தின் - விஷய வஸ்துக்களின் மேல், மீட்டு - மறுபடி,
சோர்விடத்தும் - சோர்வுற்ற விடத்திலும், உளஞ்செலா -
மனஞ்செல்லாத திரடதர தன்மையுள்ள, தூயராயினார் - உத்தம
சவுசமென்னும் பரிசுத்த தர்மகுண முடையவர்களானார்கள்,
எ-று. (313)
1361. அறுவகைப் பொறிவழி படர்ச்சி நீங்கியு
மறுவகைக் காயத்தை யருளி னோம்பியுஞ் |