636மேருமந்தர புராணம்  


 

ஹிமத்காலங்கழிந்து),    மரத்தைச்      சேர   - (வருஷாகாலத்தில்)
விருட்சத்தினுடைய அடியில் நின்று யோகம் தாங்க, (அப்போது), வான்
- மேகமானது,   மகிழ்ந்து     - இவர்களுடைய தபத்திற்கு மகிழ்ந்து,
பொழிந்த   - மழையை (அபிஷேகஞ்   செய்வது போல்) சொரிந்தன,
எ-று.                                                 (319)

1367. கூகைபேய் கவந்த மோரி டாகினி குலவுங் காடு
     நாமாக நாகஞ் சீய முழுவைசேர் மலைமு ழஞ்சு
     ஏகமாட்ய வேக மேவி யிராசமா சீயம் போல
     யோகமே போக மாக வுவந்தவ ருறைந்து சென்றார்.

     (இ-ள்.) (மேலும்),  கூகை - கோட்டான்களும், பேய் - பேய்க்
கூட்டல்களும்,    கவந்தம் - தலையற்ற துண்டங்களும், ஓரி - குள்ள
நரிகளும், டாகினி - பூதங்களும், குலவும் - வியாபித்திராநின்ற, காடு -
சுடுகாடுகளிலும்,   நாகம் - நாகப்   பாம்புகளும், மாநாகம் - பெரும்
பாம்புகளும்,     சீயம் - சிம்மங்களும், உழுவை - புலிகளும், சேர் -
தங்கும்படியான,   மலை    முழஞ்சு - பர்வத குகைகளிலும், ஏகமாய்
வேகமேவி - தனித்திருந்து    ஏகாக்கிர    சிந்தையாகிய   ஆத்மத்
தியானத்தில்    தீவிரதரமாகப்  பொருந்தி, இராசமாசீயம்போல - ஒரு
சிறந்த   ராஜஸிம்மத்தைப்   போல, யோகமே - மனவசன காயத்தை
தியானத்தினாலடக்கலே,    போகமாக - மிகுதியான  சௌக்கியமாக,
உவந்து - சந்தோஷித்து,     அவர் - அவர்கள்,        உறைந்து -
இவ்விதமாகத் தியானங்களில் பொருந்தி, சென்றார் - அம்மார்க்கத்தில்
செல்வாராயினார், எ-று.                                 (320)

1368. இருதுநல் லயன மாண்டை யெல்லைசெய் திருந்து நின்று
     மரீஇயமுக் கால யோகம் வழங்குமார்க் கத்தை விட்டுத்
     திரிவித கரணந் தம்மைச் செறியவைத் தறிவை யூன்றிப்
     பொருவிலார் சிந்தை யோகந் தன்னையே பொருந்தி னாரே.

     (இ-ள்.) (பின்னரும்),   இருது - இரண்டு மாஸகாலமும், நல் -
நன்மையாகும்,   அயனம் - ஆறுமாத காலமும்,   ஆண்டை - ஒரு
வருஷ   காலமும், எல்லை   செய்து - யோகத்தில் நிற்க இவ்வளவு
இவ்வளவு என்று பிரமாணம் பண்ணிப் பிரதிஜ்ஞை செய்து, இருந்து -
அவ்வளவு   அவ்வளவு   காலம்   வரையிலும் தளராது யோகத்தில்
இருந்தும்,    நின்று - நிலையில்    உறுதியாக   நின்றும், மரீஇய -
இவ்விதமாகத்   தக்க வண்ணம் சேர்ந்து கூடிய, முக்கால யோகம் -
ஆதபகால வருஷா கால ஹிமத் காலங்களில் செய்யும்  யோகத்திலே,
வழங்கும் - செல்கின்ற,  மார்க்கத்தை - காயக்கிரசமென்னும் பாஹ்ய
தப   மார்க்கத்தை,   விட்டு - ஒரு பொருட்டாக எண்ணாமல் விலகி,
திரிவிதம் - காயம்   வாக்    மன    மென்னும்  மூன்று விதமாகிய,
கரணந்தம்மை - அந்தக்   கரணங்களை,   செறிய வைத்து - ஆத்ம
தியானத்தில்   சேரும்படியாக அடக்கி ஸ்தாபித்து, அறிவை - நிச்சய
ஸம்மியக் ஞானத்தை,