642மேருமந்தர புராணம்  


 

த்விதீயஸமயத்திற்கெடுத்து,  முகடுற  - பெருமை பொருந்த, எழுந்த -
உண்டாகிய,     சிந்தை    - அந்த   பிரதம சுக்கிலத் தியானத்தை,
(விருத்தியாக),     முறுக்கி - பலஞ்செய்து, பின் - பிறகு மூன்றாவது
ஸமயத்தில்,    உருக்கழல்போல்  - கொல்ல னுலையிலிரும்புருக்கும்
அக்னி     போல், தொகையுடை -    சேர்க்கையுடைய,      பேடி
வேதந்தன்னையும்     - நபும்ஸக     வேதமென்னும் கர்மத்தையும்,
உடைத்திட்டு     - கெடுத்து,    இப்பால் - அதற்கிப்பால் நலாவது
ஸமயத்தில், எ-று.                                      (331)

1379. முட்டைத்தீப் போல வெம்பும் மொய்குழ லார்தம் வேதங்
     கெட்டபி னிரதி யாச்சம் பயமுவர்ப் பரதி சோகம்
     விட்டவப் பொழுது வைத்தீப் போலெழும் புங்க வேத
     மட்டவர் வேத நீத்த வணியட்டி முனிவ ரானார்.

     (இ-ள்.) முட்டைத் தீப்போல - எருமுட்டையின் அக்னி போல,
வெம்பும்    - வெதும்புகின்ற,     மொய்குழலார் தம் வேதம் - ஸ்த்ரீ
வேதமென்னுங் கர்மமானது, கெட்ட பின் - நீங்கின பின்பு, (ஐந்தாவது
ஸமயத்தில்),    இரதி   ஆச்சம் பயம் உவர்ப்பு அரதி சோகம் - ரதி
ஹாஸ்யம் பயம் ஜுஹுப்ஸை அரதி சோகமென்னும் ஆறுபிரகிருதிகள்,
விட்ட  - நீங்கிவிட்டன, அப்பொழுது - அந்த ஆறாவது ஸமயத்தில்,
வைத்தீப்போல்     - வைக்கோலில் பற்றின அக்னி போல், எழும் -
வெதும்பி     யெழுகின்ற, புங்க வேதம் - புருஷவேதமென்னும் கர்ம
பிரகிருதியையும்,    அட்டு - ஜயித்து, அவர் - அவ்விரு முனிகளும்,
வேதநீத்த     - நவ நோகஷாயங்களை விலக்கி ஜயித்த, அணியட்டி
முனிவரானார் - அனிவிருத்திகரண குணஸ்தான முனிவர்களானார்கள்,
எ-று.                                                (332)

1380. நல்லவாஞ் சலன கோத மானமா யுலோபந் தம்மைச்
     சொல்லிய முறையின் மூன்று தானத்திற் றுவக்க றுத்துப்
     புல்லிதா முலோபந் தன்னை வீழ்த்தந்த மூழ்த்தத் திற்பி
     னெல்லையிற் சுத்தி பெற்றா ரிருபத்தெண் மோக நீத்தே.

     (இ-ள்.)      (அதன்        மேல்),            நல்லவாஞ்
சலனகோதமானமாயுலோபந்தம்மை   - ஸஞ்ஜுவலன       குரோதம்
ஸஞ்ஜுவலன மானம் ஸஞ்ஜுவலனமாயம் ஸஞ்ஜுவலனலோபமென்னும்
நாலு பிரகிருதிகளை, சொல்லிய முறையின் - சொல்லப்பட்ட வரிசைப்
பிரகாரம், மூன்று தானத்தில் - மூன்று சமயத்தில் (அதாவது : ஏழாவது
ஸமயத்தில்     ஸஞ்ஜுவலன குரோதத்தையும், எட்டாவது ஸமயத்தில்
ஸஞ்ஜுவலனமானத்தையும்,     ஒன்பதாவது ஸமயத்தில் ஸஞ்ஜுவலன
மாயத்தையும், மூன்றுஸ்தானமாக), துவக்கறுத்து - சம்பந்தத்தை நீக்கி,
(இப்படி   அனிவிர்த்தி கரணகுணஸ்தானத்தில் செய்து முடித்து அதன்
பிறகு ஸூக்ஷ்மஸாம்பராய குணஸ்தானகாலமாகிய), அந்த மூழ்த்தத்தில்
- அந்தர் முகூர்த்த காலத்தின் அந்திய